ஜோதிட சாஸ்திரத்தின் கூற்றின்படி சூரியனை இராகு விழுங்குவது சூரிய கிரகணமாக கருதப்படும். இதன் வெளிப்பாடாக வானில் நெருப்பு வளையத்தை காணலாம். ஒருவேளை சூரியன் கேதுவோடு இருக்கும்போது வரும் அமாவாசை சூரிய கிரகணமாகும். இதை அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சூரியன் மற்றும் பூமிக்கு நடுவில் சந்திரன் வந்து மூன்றும் ஒரே கோட்டில் சந்திப்பது சூரிய கிரகணம் ஆகும்.
வானியல் நிகழ்வுகளில் முக்கியமானதான இந்த கிரகணம், இந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் சூரிய கிரகணமாக நிகழ உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புக்கு என்ன பலன் செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சுப நிகழ்வுகளாக கருதப்படாத நேரத்தில் ஒன்று கிரகணம் ஆகும். பொதுவாக இந்த கிரகண நேரத்தில் தெய்வ ஆலயத்தில் கூட பூஜைகள் நடப்பதில்லை. தெய்வ சன்னதியிலே சுபமாக கருதப்படாத கிரகணம் நேரத்தால் நமக்கு நன்மைகள் நடக்காது.
25 அக்டோபர் 2022 அன்று துலாம் ராசியில் சூரியன், சந்திரன், கேது, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய 5 கிரக சேர்க்கை இருப்பதால் சில நட்சத்திரக்காரர்களுக்கு சில பாதிப்பு அளிக்கும். இந்த சூரிய கிரகண பாதிப்பில் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் பாதிப்பு அதிகமாக துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு மற்றும் சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்பட உள்ளதால் கண்டிப்பாக் இந்த பரிகாரம் செய்தல் வேண்டும்,
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…