அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் கும்ப ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
கும்ப ராசியினரே! கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம். அதாவது, இந்த புத்தாண்டு அதிகளவில் நற்பலன்கள் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே, எந்த செயல்களிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, திருமண முயற்சியில் ஈடுபட நினைக்கும் கும்ப ராசியினருக்கு பல சிரமங்கள், தடை, தாமதங்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
அதேபோல், காதல் உறவில் இருக்கும் கும்ப ராசியினருக்கும் பல சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆனால், இறுதியில் திருமணம் கைக்கூடி வரும். ஏற்கனவே திருமணமான தம்பதிகளுக்கு இடையில் இருந்தவந்த பிரச்சனைகள், மனக்கசப்புகள் ஓரளவு குறையும். ஆனால், ஒரு முடிவுக்கு வராது. வெளிநாடு வாய்ப்புகள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். எனவே, தாராளமாக முயற்சிக்கலாம்.
உத்தியோக மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கும் மனதிற்கு பிடித்தாற்போல் கிடைக்கும். அதேபோல், தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு அல்லது தந்தையின் உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் அனைத்தும் இந்த ஆண்டின் பிற்பகுதியில், அதாவது அக்டோபர் மாதத்திற்கு பிறகு நீங்கும். தந்தை - மகன் இடையே பாசம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டு ஆனால் கொஞ்சம் தடை, தாமதம் ஏற்படும்.
பணவரவு, பொருளாதாரத்தை பொறுத்தவரையில் ரொம்பவே சுமாராக தான் இருக்கும். எனவே, பெரிய திட்டங்களை ஒத்திவைப்பது உத்தமம். அதேபோல், புதிய தொழில் தொடங்குவது அல்லது தொழிலில் பெரிய அளவிலான முதலீடுகள் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்து தொழில் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். தப்பிதவறிக்கூட, இருக்கின்ற அல்லது கிடைத்த வேலையை எக்காரணத்திற்காகவும் விட்டுவிட வேண்டாம். அப்பறம் சிரமப்பட வேண்டியிருக்கும்.
மேலும், உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை உடல்வியர்க்கும்படி வேலைசெய்ய முயற்சி செய்யுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் உங்க குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கும். எனவே, அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிடக்கூடாது. நண்பர்களின் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…