அற்புதமான தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14, 2023 அன்று பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சோபகிருது ஆண்டு" என்று சொல்லப்படுகிறது. இதில் 'சோப' என்றால் மங்களம் என்று பொருள். 'கிருது' என்றால் செயல், செய்கை என்று பொருள். அந்தவகையில், 60 தமிழ் வருடங்களில் 37வது ஆண்டாக வரும் மங்களங்கள் நிறைந்த இந்த சோபகிருது வருடத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தால் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த தமிழ் புத்தாண்டு, சுபகிருது வருடமாக அமையப் போகும் சிறப்பான மாதமாக அமையும். அதாவது, சகலத்திலும் நன்மைகளைப் பெறப் போகும் சிறப்பாக காலமாக உள்ளது. எல்லாவற்றிலும் சிறப்பைப் பெறக்கூடிய மாதமாக இந்த மாதம் உள்ளது. தொழில் சார்ந்து லாபங்களைப் பார்க்கின்ற ஒரு அற்புத காலமாக இந்த மாதம் அமைகிறது. திறமைக்கேற்ற பணிகளைச் செய்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருந்தியவர்களுக்கு, இம்மாதம் சிறப்பாக உள்ளது.
எல்லா வகையான நன்மைகளையும் பெறப்போகும் அற்புதமான ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு அமைகிறது. அந்த வகையில், தொழில் நிமித்தமாக நல்ல லாபம், முன்னேற்றம் போன்றவற்றைக் காணக் கூடிய மாதமாக அமைகிறது. கையில் இருக்கக் கூடிய தொகையை வைத்து அடுத்து பண வரவு ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடல்நிலை சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் விலகி, ஆரோக்கிய மேம்பாடு நடக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, கடன் வாங்கியே வாழ்க்கையைக் கழித்து கஷ்டப்பட்டவர்களுக்கு, கடன் தொந்தரவு நீங்கி நன்மை உண்டாகும். உறவுகளுக்கிடையே இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி உறவு மேம்படும். திருமண வரங்கள் கைகூடி வரப்போகும் ஆண்டாக அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிரச்சனைகள் அனைத்தும் விலகி குழந்தை வரம் பெறுவீர். ஆனால், குழந்தைகளின் உடல்நிலையைச் சரியாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: பெரியவர்களை மதித்து நடத்தலும், அவர்களின் ஆசிர்வாதங்களைப் பெறுவதும் நற்பலன்களை அளிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…