Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசி வழிபாடு.. இன்று மாலைக்குள் இதை செய்துவிட வேண்டும்.. | Vaikunta Ekadasi Valipadu in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசி வழிபாடு.. இன்று மாலைக்குள் இதை செய்துவிட வேண்டும்.. | Vaikunta Ekadasi Valipadu in TamilRepresentative Image.

மார்கழி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்று நமக்கு தெரியும். அதுவும், இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் மிகவும் விஷேசமான ஒன்று. இந்த மங்களகரமான நாளில் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்தால், நம் பாவங்கள் அனைத்தும் விலகி, சொர்க்கத்தை சென்றடைவோம். அதுமட்டுமல்லாமல், தீராத நோய்கள் தீருவதோடு, சகல செல்வங்களும் கிடைக்கும். 

இவ்வளவு அற்புத பலன்களை கொண்ட இந்த நாளில் நாம் ஏற்றம் தீபமானது, மூன்று கோடி ஏகாதசிகள் பெருமாளை வணங்கியதற்கு சமம். வைகுண்ட ஏகாதசி நாளான இன்று இந்த தீபத்தை இன்று மாலைக்குள் இந்த தீபத்தை ஏற்றிவிட வேண்டும். சரி, வாங்க என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்க்கலாம். 

செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசி வழிபாடு.. இன்று மாலைக்குள் இதை செய்துவிட வேண்டும்.. | Vaikunta Ekadasi Valipadu in TamilRepresentative Image

முதலில் ஒரு கிராம்பு, ஏலக்காய், பச்சைக்  கற்பூரம் மூன்றையும் பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொள்ளுங்கள். பின்னர், இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக்கொண்டு, அதில் நாம் தயாரித்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி, திரி போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தீபத்தை வீட்டின் பூஜையில் உள்ள பெருமாள் படத்திற்கு முன்பாக ஏற்ற வேண்டும். ஒருவேளை வீட்டில் பெருமாள் படம் இல்லையென்றால், லட்சுமி தயார் படத்திற்கு முன்பாக ஏற்றலாம். இப்போது, நெய்வேத்தியமாக கொஞ்சம் அவல் மற்றும் சிறிதளவு வெல்லம் இரண்டையும் கலந்து அதை தீபத்தின் முன்பு வைத்து விடுங்கள். 

செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசி வழிபாடு.. இன்று மாலைக்குள் இதை செய்துவிட வேண்டும்.. | Vaikunta Ekadasi Valipadu in TamilRepresentative Image

அதன்பின்னர், விளக்குகளின் மீது துளசி இலையை வைத்து, தீபம் ஏற்றி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதே தீபத்தை தொடர்ந்து 43 நாட்கள் ஏற்றி வந்தால், வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் விலகி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் மகிழ்ச்சி, ஒற்றுமை உருவாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்