வீட்டில் எந்தெந்த பொருட்கள் எங்கு வைக்க வேண்டும் என்று அன்றிலிருந்து இன்று வரை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதில் ஒன்று தான் செருப்பை வீட்டிற்கு வெளியில் வைக்கும் முறை. இருப்பினும், செருப்பை கண்ட கண்ட இடத்தில் விட கூடாது. இதனால், நம் வீட்டில் கஷ்டம் தலைவிரித்து ஆட தொடங்கும்.
செருப்பு என்பது நம் பாதங்களை காக்கும் பாதுகாவலன் தான். ஆனால், இந்த காலக்கட்டத்தில் செருப்பை வீட்டிற்குள்ளே அணிந்துக் கொண்டு நடக்கிறார். இதை ஏதோ ஒரு ஃபேஷன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் உடல் நல குறைவால் அணிய வேண்டிய சூழல் இருக்கும், அது தவிர்க்க முடியாத ஒன்று தான். இருப்பினும், நம்மில் பலரும் சமையலறையில் செருப்பை அணிந்து கொண்டு சமைப்போம். இது முற்றிலும் தவறான ஒன்று.
சமையலறை என்பது பசியாற உணவு படைக்குமிடம். அன்னபூரணி மகாலட்சுமி வாசம் செய்யும் அந்த இடத்தில் செருப்பு காலுடன் சமைக்கும் போது நிச்சயம் குடும்பத்தில் தீராத கஷ்டம் வந்து சேரும். அதுமட்டுமல்லாமல், படுக்கையறையிலும் சிலர் செருப்பு பயன்படுத்தும் வழக்கம் இருக்கும். இதுவும் தவறான ஒன்றே. செருப்பானது எதிர்மறை ஆற்றலை தரக் கூடியது. இதை நாம் உறங்கும் இடத்தில் விடும்போது நமது உள்ளத்தில் எதிர்மறை சிந்தனை தான் உருவாகும்.
அதேபோல், செருப்பை வடக்கிழக்கு மூலையில் விடக் கூடாது. ஏனென்றால், வடக்கிழக்கு மூலை என்பது குபேரர் குடியிருக்கும் இடம். இந்த இடத்தில் நாம் செருப்பை விட்டால் எப்பேர்பட்ட பண வரவு இருக்கும் குடும்பம் கூட அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறுவார்கள், பணக்கஷ்டம் தலைதூக்கும்.
அதேபோல் சிலர் வீட்டிற்குள்ளே நுழையும் நுழை வாசலில் செருப்பை விடும் பழக்கம் இருக்கும். இது வீட்டிற்குள் வரும் நல்ல அதிர்வலைகளை தடுக்கும். வீட்டு நிலை வாசல் என்பது தெய்வங்கள் உள்ளே வரும் வழி, இந்த வழியில் நாம் செருப்பினை விடும் போது நிச்சயமாக இதைத் தாண்டி ஒரு தெய்வமும் வீட்டிற்குள் வராது. இப்படி சில தவறுகளை இதுவரை தெரியாமல் செய்திருந்தாலும், தெரிந்த பிறகு அந்த தவறை சரிசெய்துக் கொள்வோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…