மத்திய மற்றும் மாநில அரசு, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த, திறமையான மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை அளித்து வருகிறது. ஏனெனில், திறமையுள்ள, பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் 8 ஆம் வகுப்பில் குடும்பப் பிரச்சனைகளால் பள்ளிப்படிப்பை இடைநிறுத்துகின்றனர். இதனைத் தடுக்கவும், மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு உதவும் வகையில், தேசிய அளவிலான மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் 9 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1 லட்சம் புதிய மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு வழங்கக் கூடிய இந்த உதவித் திட்டத்தின் கீழ், மாநில அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு அவர்களின் தொடர் கல்விக்காக வழங்கப்படுகிறது.
அதன் படி, ஆண்டுதோறும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.12,000 வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டமானது, நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டத்த்தின் அங்கீகரிக்கப்பட்ட போர்ட்டலில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்த, திறமையான மாணவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். அதன் படி, மாணவர்களுக்கான NMMS உதவித் தொகைகள் DBT முறையைப் பின்பற்றி மின்னணு பரிமாற்றம் அதாவது பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இது மத்திய அரசு வழங்கும் 100% நிதியுதவி திட்டமாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…