நாளை மார்ச் 14 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு விடுமுறையைக் காட்டிலும் உள்ளூர் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த உள்ளூர் விடுமுறைகள் அந்தந்த மாவட்டத்தின் கலெக்டர் அவர்கள் தான் உறுதி செய்வார்கள். அந்த வகையில் நாளை மார்ச் 14 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விசேஷமான நாளாகும். ஏனெனில் பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு வருவது சபரிமலைக்கு செல்வதற்கு இடாகும். ஆகவே, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
அரசின் மிகவும் முக்கியமான பணிகள் தவிர மற்ற அனைவருக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழக அரசின் அறிவிப்பு படி 12 ஆம் வகுப்பு தேர்வு எந்த மாற்றமும் இன்றி நடைபெறும். மேலும் நாளைக்கு பதிலாக மே 13 ஆம் தேதி பணிநாளாக அறிவிக்கப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…