தமிழகத்தில் நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி கல்வித்துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் தமிழ்நாட்டில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற ஆரம்பித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
மாணவர்கள் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ் பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 1,115 பேரும், 12ம் வகுப்பு மாணவர்கள் 49,559 பேரும் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…