Baakiyalakshmi Today Episode: நாளுக்கு நாள் பாக்கியாவின் துணிச்சலும் தையிரியமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இனியா ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் கூட போன் யூஸ் பண்ணதால பெற்றோர்களை கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க. வீட்ல சொல்ல பயந்துக்குட்டு இனியா கோபிய கூட்டிட்டு போயிட்டா. இந்த விஷயம் தெரிஞ்ச பாக்கியா வீட்டுக்கு வந்த உடனே திட்டுறாள். நடந்த உண்மை சொன்ன உடனே வீட்ல எல்லாரும் இனியாவ கண்டபடி திட்டுறாங்க.
அப்ப கரெக்ட்டா கோபி வர, அவரு வந்த இனியாவ திட்ட கூடாதுன்னு சொல்ல, இது தான் சான்ஸ் அப்பா இருந்தா திட்ட விடமாட்டாருன்னு இனியா கோபி கூடவே அவங்க வீட்டுக்கு போயிட்டா. வீட்ல எல்லாரும் அழுது புலம்பிட்டு இருக்கும் போது நம்ப தாத்தா செமையா ஒரு ஐடியா பண்ணாரு. இனியாவ கோபிய நம்பி தனியா விட முடியாது, அதுனால திரும்ப இனியா வர வரைக்கும் நான் அவ கூடவே அந்த வீட்ல இருக்கேன்னு சொல்லிட்டு கெளம்புறாரு.
இப்ப கோபிக்கு என்ன பண்றதுனே தெரில, ஆனா வேற வழி இல்ல அப்பா ஆச்சே. அங்க உக்காந்துட்டு தாத்தா அது சரில இது சரிலன்னு சொல்லி நல்லா டென்ஷன் ஏத்துராறு. இதுனால கோபிக்கும் ராதிகாவுக்கும் தினமும் சண்டை தான். அங்க பாக்கியா வீட்ல எல்லாரும் தாத்தா அங்க போனது புடிக்காம கோவத்துல இருக்காங்க. இங்க தாத்தாவும் இனியாவும் கேரம் போர்டு விளையாடிட்டு இருக்காங்க. அப்புறம் நடந்ததை பத்தி பேசி வருத்தப்படுறாங்க.
இனியா எனக்கு பசிக்குது தாத்தான்னு சொல்றா. தாத்தா நக்கலா கேட்க, கோபி கெஞ்சி ராதிகாவ சமைக்க சொல்கிறார். எல்லாரும் சாப்பிட உட்காருராங்க. என்னம்மா இது சாப்பாடு சாம்பார் எல்லாம் இப்படி இருக்கு சப்புன்னு சொல்றாரு. ஆனா கோபி ஆஹா சூப்பரா இருக்குன்னு ஜகா வாங்குறாரு. புடிக்கலைனாலும் சில பொய்லாம் கேட்டு தான் ஆகணும் இல்ல இனியா, இதுக்கு தான வீட்டை விட்டுட்டு வந்தன்னு தாத்தா சொல்றாரு. இன்னும் கோபி என்னெல்லாம் அனுபவிக்க போறாருன்னு பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…