Eeramana Rojave 2 Today Episode: பார்த்தி ஜீவா அப்பா அம்மாக்கு 60வது கல்யாண விசேஷம் நடந்துட்டு இருக்கு. ஜீவா காவ்யா காதலிச்சிட்டு இருக்கும் போது பார்த்த அருணாசலத்தின் நண்பர் ஒருத்தர் வந்தத பார்த்துட்டு காவ்யா மறஞ்சி நிக்கிறாள். அப்புறம் மாமியார் கிட்ட நடந்ததை சொல்லிட்டு, நான் இங்க இருந்து கிளம்புறேன். நீங்க ஏதாவது சொல்லி சமாளிச்சிடுங்கன்னு கெளம்புறாள்.
ஆனா பார்வதி இதையே சாக்கா வச்சு காவ்யாவை எல்லாரும் முன்னாடியும் அவமானப் படுத்துறாங்க. ஜீவாவும் பார்த்தியும் எல்லா பக்கமும் தேடுறாங்க ஆனா கிடைக்கல. யார் சொன்னாலும் காவ்யாவ தப்பா நினைக்காத பார்த்தி இன்னைக்கு ரொம்பவே ஒடஞ்சி போயிட்டான். அவனே காவ்யாவ வெறுக்குற அளவுக்கு பார்வதி பண்ணிட்டாங்க. கடைசில காவ்யா அப்பா அம்மா அருணாச்சலத்துக்கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க.
இதுல வேற நடுல தேவி குரூப் வந்து வெந்த புண்ணுல வேல பாசுர மாறி நல்லா ஏத்தி விட்டுட்டு போறாங்க. வேற வழியில்லாம எல்லாரும் வீட்டுக்கு போறாங்க. காவ்யா ஆட்டோல வீட்டுக்கு வந்துட்டு இருக்கா. கடைசில நடக்க இருந்த 60வது கல்யாணம் நடக்காமையே போச்சு. இப்ப மொத்த பழியும் காவ்யா மேல போட்டு நல்ல பிளான் பண்ணிட்டாங்க பார்வதி.அவ வந்த உடனே எல்லாரும் கண்ணா பின்னான்னு திட்டுறாங்க. காவ்யாவுக்கு ஒன்னுமே புரில எல்லாரும் எதுக்கு திட்டுறாங்கன்னு.
அப்புறம் யாருகிட்டயும் சொல்லாம எங்க போன்னேனு கேக்குறாங்க. காவ்யா அதிர்ச்சில அப்படியே பார்வதிய பாக்குறா, இப்ப தான் புரியுது எதுக்கு பார்வதி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்குனானு. பார்வதிக்கு செஞ்சு குடுத்த சாத்தியத்துக்காக உண்மைய சொல்லாம இருப்பாளா காவ்யா இல்ல இந்த பிரச்சனைய வச்சே பார்த்திய விட்டு பிரிந்து போவாளான்னு பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…