ஒருவழியா சுந்தரி எல்லாத்தையும் ஊருக்கு கூட்டிட்டு போய் பிரச்சனைய தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்காங்க. கார்த்தி அப்பா அம்மா ரெண்டு பேரும் தங்களோட பையன் இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிட்டான்னு தெரிஞ்சிகிட்டாங்க. அப்புறம் சுந்தரி தான் அவங்க கிட்ட என்ன நடந்ததுன்னு சொல்லி, அனு மேடம் வயித்துல வளர்ற குழந்தை நல்ல படியா பொறக்கட்டும். அதுக்கு பிறகு நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்னு சொல்லி சமாதானம் படுத்தி வச்சிருக்கா.
சரி இங்க பிரச்சனை முடிஞ்சது நம்ப கலெக்டர் ட்ரைனிங் போலாம்னு சென்னைக்கு கிருஷ்ணாவும் சுந்தரியும் கெளம்புறாங்க. போற வழில அருண் ஆளுங்களோட இவங்க காரை நிறுத்தி கொலை பண்ண வரான். அப்ப கரெக்ட்டா முருகன் வந்து அவங்கள காப்பாத்துறாரு. அருண் ஆளுங்கள அடிச்சு போட்டுட்டு சுந்தரி கிருஷ்ணாவை அனுப்புறாரு. ஆனா அருண் பின்னாடியே வந்து முருகனை கத்தியால குத்திடறான்.
அவர் அப்படியே வீட்டுக்கு போய் பேசாம படுத்துக்குறாரு. சுந்தரி மனசுல ஏதோ குழப்பம், உடனே லட்சுமிக்கு போன் பண்ணி விசாரிக்கிறாங்க. மாமாக்கு வெட்டுப்பட்ட விஷயத்தை சொல்லாம அவர் நல்லா இருக்காருன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. அப்புறம் அழுதுகிட்டே இருக்கும் போது பூசாரி வந்து பாத்துட்டு விஷம் தடவிய கத்திய வச்சி குத்திருக்கான்னு சொல்லிட்டு சிகிச்சை செய்றாரு.
இங்க கிருஷ்ணா சுந்தரியும் சென்னைக்கு போயிட்டாங்க. அங்க கொடைக்கானலுக்கு போக ஏற்பாடு நடக்குது. ஆனா சுந்தரியும் கொடைக்கானல் போறான்னு கேள்விப்பட்ட கார்த்தி இங்க வந்து சுந்தரிய போக கூடாதுன்னு சொல்றான். உன்னால நிறைய பட்டுட்டேன் நான் ட்ரைனிங்-க்கு கண்டிப்பா போவேன்னு சொல்றா.
உன்ன யாரு அனுக்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னது போய் சொல்லுன்னு நக்கலா சொல்றான். அப்ப கரெக்ட்டா அனு போன் பண்றா, கார்த்தி பதறி போய் ஒளறி போனை கட் பண்றான். அப்ப சுந்தரி நீ தெயிரியமா இருந்தா சொல்ல வேண்டியது தானேன்னு பல்பு கொடுக்கிறாள். இப்போ முருகன் மாமா நிலைமை தெரிஞ்சி சுந்தரி ட்ரைனிங்-க்கு கொடைக்கானல் போவாளா இல்லையானு தெரிஞ்சிக்க வெயிட் பண்ணுங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…