Thendral Vanthu Ennai Thodum Today Episode: குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு போன இடத்துல எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க. நம்ப அபி வெற்றி ரொமான்ஸ்ச பத்தி சொல்லவே வேணாம். அப்புறம் வீட்ல இருக்குற எல்லாத்தையும் வெற்றி நல்லா இம்ப்ரெஸ் பண்றாரு.
எல்லாத்துக்கும் சாப்பிடு ரெடி பன்றதென்ன, விழுந்து விழுந்து கவனிக்கிறது என்ன, எல்லாருக்கும் படுக்குறதுக்கு இடத்தை ரெடி பன்றதென்ன, நான் கீழ படுக்க மாட்டேன்னு சொன்ன மாமனாருக்கு உடனே கயிற்று கட்டில் பின்னி கொடுக்குறது என்ன இப்படி சொல்லிகிட்டே போலாம். இதுல வேற நடுல அபி வெற்றி யாருக்கும் தெரியாம காணாமல் போய் ரொமான்ஸ் பண்றது, அதை குடும்பமே பாத்து சந்தோசப்படுறது என்ன. இப்ப தான் சீரியல் நல்லா போகுதுன்னு ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்னைக்கு எபிசோடுல நைட் எல்லாரும் நல்லா தூங்கிட்டாங்க. அப்ப திடிர்னு சத்தம் கேட்டு வெளிய வந்து பாத்தா ஜட்ஜ் சங்கர நாராயணன கொலை பண்ண ஆளுங்க வந்திருக்காங்க. மறுபடியும் வெற்றி அவங்க கிட்ட சண்டை போட்டு அடிச்சு துரத்துகிறான். இவங்களுக்கு பாதுகாப்பு தர ஊர்ல இருந்து சித்தப்புவ வர சொல்லிருக்கான். அடுத்த நாள் காலைல ஜட்ஜ் தூங்கிட்டு இருக்காரு அவர் பக்கத்துல பாம்பு ஒன்னு உக்காந்துட்டு புஸ் புஸ்னு படம் எடுத்துட்டு இருக்குது. வெற்றி அந்த பாம்பை கையாள எடுத்து காப்பாத்துறாரு.
எல்லாம் ரெடியாகி கோவிலுக்கு போறாங்க. அங்க யாரோ ஒருத்தன் திருடிட்டானு எல்லாரும் அடிக்கிறாங்க. அப்புறம் ஜட்ஜ் போலீஸ்-க்கு போன் பண்ணி புடிச்சு கொடுக்கலாம்னு சொல்றாங்க. ஆனா வெற்றி முத்தெல்ல என்ன நடந்ததுன்னு விசாரிங்க, எந்த தப்பும் பண்ணாம நான் மாட்டிக்கிட்டநால தான் இந்த நிலமைல இருக்கேன்னு சொல்லி கேக்குறாரு. அப்புறம் என்ன நடந்தது, எதுக்காக அந்த பையன் திருடினான், இது மூலமா சமூகத்துக்கு என்ன மெசேஜ் சொல்ல போறாங்கன்னு வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…