Baakiyalakshmi Today Episode: விடாப்பிடியா ராதிகாவ கல்யாணம் பண்ண கோபிக்கு நடக்கும் கொடுமைகளை சூப்பரா காமிச்சிட்டு வராங்க நம்ப பாக்கியலட்சுமி சீரியல்ல. அப்படி இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாக்கலாமா.
மயூரி கோபி கிட்ட நான் உங்கள அப்பான்னு கூப்பிடட்டுமானு கேக்குறா? அதுக்கு எமோஷனலான கோபி ரொம்ப சந்தோசமா ஒதுக்குறான். அப்புறம் தன்னோட பொண்ணு ஞாபகம் வந்து ராதிகா கிட்ட பொலம்புறாரு. எனக்கு என்னோட அம்மா அப்புறம் இனியா மட்டும் தான் உலகமே. இனியா என்கூட வந்தா நீ அவள நல்லா பாத்துப்பியானு கேக்குறாரு. ராதிகா ரொம்ப பீல் பண்ணி, நல்லா பாத்துப்பேன்னு சொல்றாங்க.
அடுத்த நாள் தான் கோபிக்கு இருக்கு! ஏன்னா மயூ அப்புறம் இனியா ரெண்டு பேத்துக்கும் ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் நடத்துறாங்க. இது தெரிஞ்சிக்கிட்டு கோபி என்னென்னமோ சொல்லி ராதிகாவ மட்டும் அனுப்ப ட்ரை பன்றாரு. ஆனா அது வேலைக்கு ஆகல. வேற வழி இல்லாம கோபி ராதிகா, மயூவ கூட்டிட்டு கெளம்புறாரு. அங்க பாக்கியா இனியாக்கு அவமானம் ஏற்படற மாறி நடந்துக்க கூடாதுன்னு தன்ன தானே தயார் படுத்திட்டு இருக்கிறாள். அதை பாத்த இனியா ரொம்ப பூரிச்சு போறாள்.
பாக்கியா இனியாவ வண்டில கூட்டிட்டு கிளம்பும் போது, அந்த பக்கம் கோபி அவர் குடும்பத்தோட வராரு. அதை பாத்த இனியா கொஞ்சம் பீல் பண்றா. அப்புறம் பாக்கியா கூட ஸ்கூல்லுக்கு போற இனியா கிட்ட அவளோட பிரெண்ட்ஸ் எல்லாம் அவளோட அப்பா வரலையான்னு கேக்குறாங்க. ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு இருந்தப்ப தான் அவளுடைய நண்பர்கள் அங்க பாரு உன்னோட அப்பா வாராருன்னு சொல்றாங்க. இனியாக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அடுத்து என்ன நடக்க போகுதுன்னு காத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…