மக்களின் இதயம் கவர்ந்த சுந்தரி சீரியலில் தினமும் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இறுதியாக நாம எதிர்பார்த்து கொண்டிருக்கும் தருணமே இதோ இன்று விஷேசமான நாளில் நடக்க உள்ளது. ஏன்னா நம்ப சுந்தரி தொடர் ஆரம்பிச்சு இன்னையோட 500 நாட்கள் ஆகிவிட்டது. இதுல ரசிகர்களாகிய நமக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்றைய எபிசோடு ஒரே டேக்ல நடிச்சு அசத்தப்போறாங்க.
ஏன்டா எனக்கும் அனு மேடத்துக்கும் நடுவுல பிரிவு உண்டு பண்ண பிளான் பன்னிட்டு இருக்கியான்னு சுந்தரி கார்த்தி சட்டையை பிடிச்சு கேக்குறாங்க. ஆனா நம்ப கார்த்தி நீ என்ன வேணா பண்ணிக்கோ, கண்டிப்பா நான் நினச்சது தான் நடக்க போகுதுன்னு சந்தோசமா இருக்காரு. ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் என்னென்னா, சுந்தரி இப்படி பண்ண மாட்டான்னு தெரிஞ்ச அனு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க சுந்தரி அம்மா கிட்ட போன் பண்ணி கேக்குறாங்க.
அப்ப அவங்க அனுவ வீட்டுக்கு கூப்பிட்றாங்க. என்னுடைய மகளும் மருமகனும் வந்திருக்காங்க, நீங்க தான் அவர பாத்தது இல்லைன்னு சொல்றாங்க. அனுவுக்கு ஏதோ ஒன்னு தோணுது, சரின்னு முடிவு பண்ணி சுந்தரி வீட்டுக்கு கெளம்புறாங்க. எப்படி தனியா போறதுன்னு கார்த்திகையும் கூப்பிட்றா அனு. அவர் தான் சுந்தரி வீட்டுக்கு சொன்ன வர மாட்டாருன்னு ஹாஸ்பிடல் போலாம்னு பொய் சொல்லி கூட்டிட்டு போறாங்க.
நாம எல்லாம் காத்திருந்த அந்த தருணம்! இன்னைக்கு கண்டிப்பா மாப்பிள்ள மாட்டுவான் டா. அப்படி தான நினைப்போம் ஆனா பாருங்க கட்டாயம் நடக்காது. என்ன கார்த்திக்கு தெரிஞ்சு போச்சு அனு சுந்தரி வீட்டுக்கு தான் போக கூப்பிடறான்னு. நம்ப ஆளு யாரு இத்தனை நாளா ரெண்டு பொண்டாட்டி கட்டிட்டு டிமிக்கி கொடுத்துட்டு இருந்தாருள, இப்ப மட்டும் என்ன மாட்டுவாரா? பாக்கலாம். விறுவிறுப்பான தொடரில் இன்று கார்த்தி அனுவை சுந்தரி வீட்டுக்கு கூட்டிட்டு போவாரா, இதனால் எல்லாத்துக்கும் கார்த்தி பற்றிய உண்மை தெரிய வருமா என்ன நடக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…