அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முடிவு யாருமே எதிர்பாராத வகையில் அசீமை வின்னராக முன்னிறுத்தியது. விக்ரம் தான் டைட்டின் வின்னராக வருவார் என எதிர்பார்த்த நிலையில், அசீம் வெற்றி பெற்றதற்கு பின் பல உள்ளடி வேலைகள் நடைபெற்றதாக இணையதளவாசிகள் பேசி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடி மிகப் பெரிய வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. கடைசி சீசனான இந்த 6வது சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களின் வாக்கைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் அசீம்.
21 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், அமுதவாணன், மைனா ஆகிய 6 பேர் இருந்தனர். கடுமையான போட்டி நடைபெற்று வந்த சூழலில் பிக்பாஸ் தனது வேலையைக் காட்டினார்.
பிக்பாஸ் 6 இறுதி வாரத்தில் நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்க்கில், பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் எனும் வாய்ப்பை கொடுத்தார் பிக்பாஸ். அதில் 3 லட்சம் ரூபாய் இருப்பதையும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அந்த 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார் கதிரவன். இவர் இப்படி வெளியேறுவார் என அவரது ரசிகர்கள் நினைக்கவில்லை. அதேநேரம் அடுத்தும் இதேபோல் பணப்பெட்டி டாஸ்க் வந்தது. அதில் இம்முறை 3 லட்சத்துக்கு பதில், 11 லட்சம் ரூபாய் இருந்தது. அமுதவாணன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சிகரமாக மைனாவை வெளியேற்றினர்.
கடைசி நாள் போட்டிக்கு, ஷிவின், அசீம், விக்ரமன் ஆகியோர் தகுதி பெற்றனர். இவர்களை ஆதரிக்கும் மக்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய தமிழகமே காத்திருந்தது. வெளிநாடு வாழ் தமிழர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பயங்கர எதிர்பார்ப்பில் இருந்தனர்.
முந்தைய 5 சீசன்களில் யார் வெற்றி பெறுவார் என சுலபமாக கணிக்க முடிந்தது. ஆனால் சமபலத்துடன் மோதிய ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோரில் யார் வெற்றிபெறுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையால் ரசிகர்களே சற்று குழம்பிப் போய்தான் இருந்தனர். ஆனாலும் அசீம் வெற்றி பெறுவார் என பெரும்பாலும் யாரும் நினைக்கவில்லை.
வெற்றிபெற வேண்டியது விக்ரமன்தான். ஆனால் கடைசி கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தது சனி. அவர்களுக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட ரசிகர்கள் பலரும் அசீமை வெற்றி பெற வைக்க கங்கணம் கட்டிக் கொண்டனர். இதனை தனது பிஆர் டீம் மூலமாக சரியாக கணித்து அதற்கு ஏற்ப விளம்பரங்களைச் செய்து அசீம் வெற்றி பெற்றுவிட்டார் என சிலர் எழுதி வருகின்றனர். அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை. ஆனாலும் அசீம் வெற்றி பெற்றது பலருக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…