Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் காரணம்...

Nandhinipriya Ganeshan October 18, 2022 & 11:16 [IST]
மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் காரணம்...Representative Image.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட 'சாசுரால் சிமார் கா' என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் வெளியானது. அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் வைஷாலி தக்கார். 29 வயதாகும் இவர், இந்தி வட்டாரத்தில் நன்றாக அறியப்படும் சின்னத்திரை நடிகையாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் வைஷாலி ஆக்டிவாக இருப்பதால் அவரை ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். 

மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் காரணம்...Representative Image

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீட்டில் வைஷாலி தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார். அன்று முழுவதும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சீலிங் ஃபேனில் தூக்கிட்டு வைஷாலி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது.

மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் காரணம்...Representative Image

அதில் சில காலம் வரை தான் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது முன்னாள் காதலனால் தான் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், தனக்கு வரப்போகும் கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் அபிநந்தனை தான் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் முன்னாள் காதலனால் தற்கொலை செய்வதாக குறிப்பு எழுதி வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்