இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்னு சுந்தரியை அனு வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க கார்த்தி அம்மா. அங்க போயிட்டு காட்டு கத்து கத்துறாங்க அவங்க. சத்தம் கேட்டு வந்த அனு அம்மா, வீட்டுக்கு வந்தவங்கள உபசரிச்சு பேசுறாங்க. ஆனா கார்த்தி அம்மா கண்டபடி திட்டுறாங்க, இப்படி தான் ஏற்கனவே கல்யாணம் பண்ணவங்கள உங்க பொண்ணுக்கு கட்டி வைப்பீங்களான்னு கேக்குறாங்க.
ஆனா அவங்க மரியாதை தெரிஞ்சு அமைதியா இருக்காங்க. சுந்தரியோ சாரி சாரி மா அவங்க பதட்டத்துல பேசுறாங்க நீங்க தப்பா நினைச்சிக்காதீங்கன்னு சமாதானம் படுத்துறாள். அப்புறம் இந்த விஷயம் அவங்களுக்கும் தெரியும்னு சுந்தரி சொன்ன உடனே செம்ம ஷாக் அவங்களுக்கு. இந்த கன்றாவி தெரிஞ்சுமா எதுவும் பண்ணாம இருக்கீங்கன்னு கேக்குறாங்க கார்த்தி அம்மா. நான் ஒன்னும் விருப்பப்பட்டு அமைதியா இருக்கள என்னோட போனுக்காக தான் அமைதியா இருக்கேன்னு சொல்றாங்க.
என்னோட பொண்ணு மட்டும் கர்பமா இல்லாம இருந்திருந்தா எப்பையோ இந்த உண்மைய அனு கிட்ட சொல்லிருப்பேன்னு சொல்றாங்க. அப்புறம் சுந்தரி என்னமோ சொல்லி சமாளிச்சு கூட்டிட்டு போறாங்க. அப்பன்னு பாத்து அனு உள்ள வர வழக்கம் போல சுந்தரிய திட்டி வெளிய அனுப்புறாங்க. கார்த்தி அப்பாடி இதுவரைக்கும் நாம மாட்டள எப்படியோ தப்பிச்சிட்டோம்னு ரிலாக்ஸா இருக்கான். ஆனா பாவம் மத்தவங்க தான் அவன் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டு இருக்காங்க.
சுந்தரி ஏதோ ஒரு யோசனை சொல்லி எல்லாதையும் சமாளிக்கிறாள். கார்த்தி இதை தெரிஞ்சிக்கிட்டு வந்து அவனோட அக்கா கிட்ட சண்டை போடுறான். ஆனா அவங்க சுந்தரி மட்டும் இப்படி ஒரு யோசனை சொல்லலைனா நீ இன்னேரம் மாட்டிருப்பன்னு சொல்றாங்க. அப்படி சுந்தரி என்ன ஐடியா சொல்லிருப்பாங்க வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…