Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஷயம் தெரிஞ்சி செம்ம கோவத்தில் இருக்கும் கார்த்தி அப்பா...சமாளிக்க என்ன பண்றதுன்னு தெரியாம ஊருக்கு கிளம்பும் கார்த்தி!

Priyanka Hochumin November 10, 2022 & 13:15 [IST]
விஷயம் தெரிஞ்சி செம்ம கோவத்தில் இருக்கும் கார்த்தி அப்பா...சமாளிக்க என்ன பண்றதுன்னு தெரியாம ஊருக்கு கிளம்பும் கார்த்தி!Representative Image.

அனு வீட்டுக்கு போயி கார்த்தி அம்மா சண்டை போட்டுட்டு இருக்காங்க. தப்பு பண்ணது என்னமோ இவங்க பையன் ஆனா அவங்க லட்சுமி கிட்ட அவங்க பொண்ணப் பத்தி கண்டபடி பேசுறாங்க. ஆனா அவங்க எதுவும் சொல்லாம பேசாம கேட்டுட்டு இருக்காங்க. அப்புறம் சுந்தரி மாமா போன் பன்றாரு, கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு எங்க இருக்கீங்க இங்க யாரையும் காணோம்னு சொல்றாரு. சுந்தரி நாங்க கடைல அது இதுன்னு சொல்லி சமாளிக்க, அவங்க மாமியார் போனை வாங்கி பேசுனப்ப தான் அவங்க புருஷனுக்கு சீரியஸ்சா இருக்குற தகவல சொல்றாங்க.

விஷயம் தெரிஞ்சி செம்ம கோவத்தில் இருக்கும் கார்த்தி அப்பா...சமாளிக்க என்ன பண்றதுன்னு தெரியாம ஊருக்கு கிளம்பும் கார்த்தி!Representative Image

அவங்க உடனே பதறி போயி கிளம்புறாங்க, சுந்தரி இதையே சாக்கா வச்சி மொதெல்ல இவங்கள ஊருக்கு கூட்டிட்டு போறாள். அங்க அப்புறம் அனு வீட்டுக்கு வந்த உடனே எதுக்கு சுந்தரி வந்தான்னு கேட்க, கார்த்தி அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் அதான் கெளம்பி போய்ட்டாங்கன்னு சொல்றாங்க. கார்த்திக்கு அப்பாக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு தெரியாம நேரா அக்காவ பாக்க போறான். அங்க அப்பாக்கு என்ன ஆச்சுன்னு கேக்க, அவருக்கு ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்காரு இப்போதெய்க்கு அம்மாவ இங்க இருந்து அனுப்ப வேற வழியில்ல அதான் அப்படி சொன்னது சொல்றாங்க.

விஷயம் தெரிஞ்சி செம்ம கோவத்தில் இருக்கும் கார்த்தி அப்பா...சமாளிக்க என்ன பண்றதுன்னு தெரியாம ஊருக்கு கிளம்பும் கார்த்தி!Representative Image

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா? அப்பாக்கும் உண்மை தெரியும்னு சொல்றாங்க. கேட்ட உடனே நம்ப ஆளுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் பயம். எனக்கா பண்ணி வச்சிருக்கன்னு கேட்ட உடனே, சுந்தரி மட்டும் இந்த யோசனைய சொல்லலைனா நீ இன்னேரம் என்ன ஆகியிருப்பேனே தெரிலன்னு சொல்றாங்க. அவன் இது புரியாம சுந்தரிய திட்டிட்டு இருக்கான். சரி நம்ப அவ்ளோ தான்னு நினைச்சிட்டு கெளம்புறான்.

விஷயம் தெரிஞ்சி செம்ம கோவத்தில் இருக்கும் கார்த்தி அப்பா...சமாளிக்க என்ன பண்றதுன்னு தெரியாம ஊருக்கு கிளம்பும் கார்த்தி!Representative Image

அங்க கார்த்தி அப்பா விஷயம் தெரிஞ்சும் எதுவும் தெரியாத மாறி காட்டிக்காம இருக்காரு. சுந்தரி வந்து அவங்க மாமியார் கிட்ட மாமா இப்படி இருக்குற நிலைமையில இந்த விஷயத்தை மாமா கிட்ட சொல்ல அவரை கஷ்டப்படுத்தணுமான்னு சொல்லி பிரைன் வாஷ் பண்றாங்க. அங்க அனு கார்த்தி அப்பாவ தப்பு தப்பா பேசுறத பொறுக்க முடியாம கார்த்தி அனுவை திட்டுறான. அடுத்து என்ன நடக்கும்னு வெயிட் பண்ணி பாப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்