தினமும் விருவிருப்பான கதைகளத்துடன் இயங்கும் சுந்தரி சீரியலில் இன்று என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஒவ்வொரு நாளும் கார்த்திக் மாட்டுவாரா என எதிர்பார்க்கப்பட்டே சுந்தரி ரசிகர்கள் காத்திட்டு இருப்பர். இன்னைக்கு அதற்கான நிலை வருமா..? வாங்க பாக்கலாம்.
நேத்து, மாலினிக்கு தாலி பிரிச்சி கோக்கிற ஃபங்ஷன்ல, கார்த்திக்கிற்கு வலிப்பு வந்து அவர ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் போய்ட்டு இருந்திருக்கும். இதுல, அவர பாக்க எல்லோரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கப்போ, அணு அங்க வந்துடுறாங்க. அனுவுக்கு மயக்கம் வந்து கீழே விழ, குழந்தைக்கு க்ரிட்டிகல் கன்டிஷன்னு சொல்றாங்க.
இதுல கார்த்திக்கு லேட்டா தான் அனு அதே ஹாஸ்பிட்டல்ல, அதே ரூம்ல அட்மிட் பண்ணி இருக்கிறது தெரியுது. என்ன டா பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கும் போது, அனுவோட அம்மாவும், சுந்தரியும் கார்த்திக், அனு எப்படி இருக்காங்க. எதும் பிரச்சனை இல்லையானு கேக்ராங்க. அனுவோட குழந்தைக்கு பிரச்சனை வந்துருமோனு எல்லாரும் பயந்துட்டு இருக்காங்க.
கார்த்திக்கிற்கு எந்த பிரச்சனையும் இல்ல. அனுவுக்கு தான் பிராப்ளம் சொல்லிட்டு, எல்லாரும் வருத்தப்படுறாங்க. இதுல அனுவுக்கு ரொம்ப க்ரிட்டிக்கலா இருக்குனு சொன்னதுல, அவங்களுக்கு மேற்படி ட்ரீட்மென்ட்கு ஹஸ்பன்ட்டோட கையெழுத்து வேணும்னு டாக்டர் கேக்றாங்க.
முருகனும், அனுவோட ஹஸ்பன்ட் கையெழுத்து வேணும்னு சுந்தரிட்டயும், அனு அம்மாட்டையும் கேக்கும் போது, சுந்தரிக்கு என்ன பண்றதுனு தெரியல. எல்லாரும் யோசிசிட்டு இருக்கும் போது, கார்த்திக் முகத்தைப் பாக்கணுமே. கையெழுத்து போட்டா மாட்டிப்போம். இல்லைனா அனுவுக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியாது. என்ன பண்றதுனு ரொம்ப குழப்பத்துல இருக்காரு. இதுல சுந்தரி என்ன பண்ண போறாங்கனும், கார்த்திக் கையெழுத்து போடுவாங்களானும் வெயிட் பண்ணி பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…