நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. அபி மற்றும் வெற்றி இருவரும் சந்தித்துக்கொண்ட நாள் வந்து விட்டது. ஆகையால் இன்றைய எபிசொட் என்ன சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளது என்று பாப்போம்.
என்ன தான் வெற்றி ரவுடியாக இருந்தாலும், மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு உதவி செய்யும் முதல் ஆளாகத் தான் இருக்கிறான். தன்னுடைய பகுதியில் இருக்கும் கோவிலை மேல் இடத்தில் இருபவர்கள் பூட்டி வைத்துக்கொண்டு மக்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை என்ற தகவலை தெரிந்துக் கொண்டான் வெற்றி. ஆகவே ஊர் மக்களை கூட்டிக்கொண்டு கோவிலுக்குச் செல்கிறான்.
அங்கு இருப்பவர்கள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி பூட்டை உடைத்து மக்களை உள்ளே செல்ல வைக்கிறான் வைக்கிறான். அந்த இடத்தில் கமலா வெற்றியின் செயலைப் பார்த்து பெருமிதத்துடன் நிற்கிறாள். அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியரின் கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து கெத்தாக அபி இறங்கி பக்கம் பக்கமாக டயலாக் பேசுகிறாள். வெற்றியும் அதற்கு கவுண்டர் கொடுக்கிறான்.
இருப்பினும் இருவரும் வெறுப்பின் உச்சத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது. பின்னர் காவல் துறையினரிடம் வெற்றியை கைது செய்யுமாறு உத்தரவிடுகிறாள். ஆனால் அவர்களை வெற்றி ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. வந்தவர்க்ளை அடித்து தொம்சம் செய்கிறான். அடுத்த வாரத்தில் அபி வெற்றியை எப்படி கையாள போகிறாள் என்பதை தெரிந்துகொள்வோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…