Thendral Vanthu Ennai Thodum Today Episode: அபியின் குலதெய்வ கோவில் பண்டிகைக்கு குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து செல்லும் மகிழ்ச்சியான தருவதுடன் இந்த வாரம் தொடங்குகிறது. இதோடு புதுசா அடுத்த காதல் ஜோடியின் கதையும் தொடங்க உள்ளது. அது என்ன, ஏது போன்ற விவரங்களைப் பற்றி பார்ப்போம்.
கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போன நம்ப வீட்டு பொண்ணு தான் அம்மனுக்கு முதல் பொங்கல் அப்புறம் விளக்கு ஏத்தனும் என்ற சம்பரதாயத்திற்காக வெற்றி அபியை கூப்பிட ஜட்ஜ் சங்கர நாராயணன் மற்றும் அவரை மனைவி அபி வீட்டுக்கு போறாங்க. அங்க பாத்தா வீட்ல எல்லாரும் இருக்காங்க, ஆனா வெற்றி மட்டும் இல்ல. கொஞ்ச நேரம் வெயிட் பன்னிட்டு இதுக்கு மேல முடியாது, என்ன அவமானம் படுத்தவே இப்படி பண்றீங்கலான்னு டென்ஷன் ஆகுறாரு. அப்ப கரெக்ட்டா வெற்றி வராரு, உங்களுக்கு சுகர் பிரீ ஸ்வீட் வாங்க போயிட்டு வரும் பொது டயர் பஞ்சர் ஆகிடுச்சு அதான் லேட் ஆகிடுச்சுன்னு சொல்றான்.
பிறகு இவங்க திருவிழாவோட விசேஷத்தை சொல்லி அவங்க மொத்த குடும்பத்துக்கும் புது துணி எடுத்து கொடுத்து சீர் முறையோட அழைக்கிறாங்க. அப்புறம் வெற்றி அபிய மட்டும் எங்க கூட முந்தின நாளே அனுபிறீங்களானு கேட்டு சம்மதம் வாங்குறாங்க. இப்படி ரெண்டு குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக ராசி ஆகிட்டு வராங்க. இதுக்காக மொத நாளே அபியோட வீட்டுக்கு ரெண்டு பேரும் போறாங்க. சீரியல் ஆரம்பிச்ச இத்தனை எபிசோடுல இன்னைக்கு தான் முதல் முறையா வெற்றி மாப்பிள்ளை என்ற மரியாதையோட அபி வீட்டுக்கு போறாரு. இது கொஞ்சம் பாக்க புதுசா நல்லா இருக்கு.
சரி இன்னொரு லவ் ஸ்டோரின்னு சொன்னோமே அது யாருன்னு தெரிஞ்சிக்க வேணாமா? வேற யாரும் இல்லைங்க நம்ப பரமாவும் ராதாவும் தான். எப்பையும் போல ரிப்பீட் தான். ராதா ஆட்டோ ஓட்டிட்டு இருக்கும் போது ஒருத்தன் தகராறு பண்றான். அப்ப கரெக்ட்டா பாரமா வந்து ஹெல்ப் பன்றாரு. அதுல அவருக்கு கைல அடி பட்ருச்சு, அதுக்கு ராதா முதல் உதவி செய்யும் போது ரெண்டு பேத்துக்கும் ஒரு ஸ்பார்க் ஏற்படுத்து. அநேகமா அடுத்து இவங்க தான் போல.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…