Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

Gowthami Subramani November 14, 2022 & 16:30 [IST]
2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இறந்து போன தந்தையை மீண்டும் உயிரோடு கொண்டு வருவதாகக் கூறி, இரண்டு மாத பச்சிளம் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image

கடந்த வியாழக்கிழமை அன்று, டெல்லியின் கார்கி பகுதியில் காணாமல் போயிருந்தது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் குழந்தையின் தாய் அளித்த தகவலின் படி, ஸ்வேதா என்ற பெண், தன்னார்வலராக அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இவர், குழந்தைக்கு இலவசமாக மருந்துகளும், மருத்துவ ஆலோசனையையும் தருவதாக கூறியதாகவும் கூறியுள்ளார்.

2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image

முதல் நாள், தன்னை தன்னார்வலராக அறிமுகப்படுத்திய ஸ்வேதா என்ற அந்தப் பெண், குழந்தையின் பெற்றோரையே பின் தொடர்ந்து இருக்கிறார். பிறகு, அடிக்கடி குழந்தையின் உடல் நலனையும் பரிசோதித்துள்ளார். அதன் பின், ஒரு நாள் குழந்தையை தன்னுடன் வெளியே அனுப்பி வைக்குமாறு குழந்தையின் தாயிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து, குழந்தையின் தாய் தன்னுடைய உறவுக்காரப் பெண்ணை உடன் அனுப்பி, குழந்தை ஸ்வேதாவிடம் கொடுத்துள்ளார்.

2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image

இந்நிலையில், குழந்தையுடன் அவர்கள் இருவரும் வெளியே சென்ற போது, உறவுக்கார பெண்ணுக்கு ஜூஸ் ஒன்றில் மயக்க மருந்து கலந்து குடிக்க வைத்து, குழந்தையை கடத்தியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி-ல் இருந்துள்ளதால், இதன் மூலமாகவே, டெல்லி போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தை மீட்கப்பட்டுள்ளது. ஸ்வேதாவின் நரபலி திட்டம் தோல்வியடைந்தது.

2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image

இது குறித்த விசாரணையில் தெரிவித்ததாவது, குழந்தையைக் கடத்திய ஸ்வேதா என்ற அந்தப் பெண்ணுக்கு 25 வயது எனவும், அவருக்கு மூட நம்பிக்கைகள் அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பிறந்து சில தினங்களேயான பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்தால், இறந்து போன தனது தந்தை மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஸ்வேதா மீது ஏற்கனவே இரண்டு கொள்ளை வழக்குகல் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2 மாத குழந்தை நரபலி..? தலைநகர் டெல்லியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!Representative Image

சமீபத்தில் கேரளாவில் மாந்திரீகம் என்ற பெயரில்  நடந்த நரபலி சம்பவத்தை மறக்க முடியாத நிலையில், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்