இந்தியாவை உலுக்கிய கேரள நரபலி சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள். முகமது ஷாஃபியின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட கேரள தம்பதிகள். குற்றமும் பின்னணியும் இதோ உங்களுக்காக.
ஏற்கனவே தெரிந்தது போல, எர்ணாகுளத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா இரண்டு பெண்களை நரபலி கொடுத்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டனர். அதனால் போலீசார் அவர்களை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று எப்படி நரபலி கொடுத்தார்கள் மற்றும் இதுவரை எத்தனை பேரை கொன்றுள்ளனர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வீட்டில் சோதனை நடத்திய போது மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்ட பயன்படுத்திய மூன்று கத்திகள், ஒரு வெட்டுகத்தி, மரக்கட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
என்று லைலா விடம் போலீஸ் கேட்டபோது, முகமது ஷாஃபி நரபலி கொடுத்த பிறக்க உடலை துண்டாக வெட்டி உடல் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைக்க சொன்னார். அதனால் சுமார் 10 கிலோ உடல் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்திருந்தோம் என்று கூறினார். பிறகு அந்த இறைச்சியை சமைத்து சாப்பிட வேண்டும் என்று அவர் கூறியதை அடுத்து, அதை சமைத்தேன். ஆனால் என் கணவர் சாப்பிட மறுத்தார், நான் வலுக்கட்டாயமாக அவருக்கு ஊட்டி விட்டேன். அதையும் அவர் துப்பிவிட்டதாக லைலா கூறியுள்ளார்.
முகமது ஷாஃபி வாக்கு மூலத்தில், " ஸ்ரீதேவி என்ற போலி பேஸ்புக் ஐடி மூலம் நான் பகவல் சிங்கிடம் பழக்கம் ஏற்படுத்தினேன். ஆனால் அவர் கொஞ்சம் உஷாராக இருப்பதால் ஏன்னை வாய்ஸ் மெசேஜ் அனுப்ப சொன்னார். நான் ஒரு பெண்ணை பேச வைத்து அந்த மெசேஜை அவருக்கு அனுப்பினேன். பின்பு அவர்களிடம் இருந்து பணம் பறிக்க, பேஸ்புக்கில் செல்வம் பெறுக பூஜை செய்யும் ஒருவர் எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். பிறகு ஷாஃபி அவர்களுக்கு வீட்டுக்கு சென்று சாதாரண பூஜைகள் செய்து 6 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.
எந்த பலனும் வராததால் அவர்கள் ஷாஃபியிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். பிறகு அவர்களை கொலை வழக்கில் சிக்க வைத்தால், நாம் ஏற்கனவே செய்த கொலையில் அவர்கள் கூட்டாளியாகி விடுவார்கள், அதை வைத்து இன்னும் பணம் கேட்டு மிரட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார். அப்போது அவருக்கு வந்த ஐடியா தான் நரபலி. எனவே, ஸ்ரீதேவி போல பேஸ்புக்கில் பகவல்சிங்கிற்கு நான் நரபலி பூஜை செய்து பலனை அனுபவத்திற்கிறேன், நீங்கள் செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார் ஷாஃபி. அதனை நம்பி இவர்களும் அவர் கூறியதை செய்துள்ளனர். பின்பு இரண்டாவது நரபலி கொடுத்த போது, உடல் இறைச்சி மட்டுமல்லாது இதயம், ஈரல் என்ற ஒவ்வொரு உறுப்பும் வாங்க பெங்களூரில் இருந்து ஒருவர் வருவார், நல்ல விலைக்கு போகும் என்று கூறியுள்ளார். ஆனால் அப்படி யாரும் வராததால் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை குழி தோண்டி புதைத்துவிட்டோம் என்று கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…