பிப்ரவரி மாதம் என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் எழுவது காதலர் தினம் தான். இது காதலர்களை ஒன்று சேர்க்கும் நாளாகவும் அமைகிறது. பெற்றோர்கள் வெறுக்கும் மற்றும் பிள்ளைகள் எதிர்பார்க்கக் கூடிய தினம் காதலர்கள் தினம். காதலர்கள் தனது அழகான காதலை நினைவு கூறும் வகையில், ஒருவரைக்கொருவர் தனது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலும் அமைவது இந்த காதலர் தினம் தான். இந்த தினத்தில் ஏராளமான சிறப்புகள் உள்ளன. பிப்ரவரி 14 காதலர் தினமாக இருப்பினும், 7 நாள்களுக்கு முன்னரேயே, நம் காதலை வெளிப்படுத்தும் விதமாக 7 நாள்களும் சிறப்பான தருணங்களை உருவாக்கும் வகையில் இருக்கும்.
ஆண்களும், பெண்களும் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக, அவரவர்களுக்கான உடைகளின் நிறத்தை வைத்து வெளிப்படுத்தி வந்தனர். காதலர் தினத்தைப் பொறுத்த வரை உடைகளின் நிறத்திற்கேற்ப அவரவர் எண்ணங்களின் வெளிப்பாடுகள் இருக்கும். இது அவர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை தங்களது உடை நிறத்தின் மூலம் வெளிக்காட்டுவர்.
இதில், காதலர் தினத்தில் காதலர்கள் உடையின் நிறம் மற்றும் அந்த உடைகளின் நிறத்திற்கேற்ற எண்ணங்கள் உள்ளிட்டவற்றைக் காணலாம்.
நிறம் |
காதலர்களின் எண்ணங்கள் |
பச்சை |
காதலர் / காதலிக்காக காத்துக் கொண்டிருப்பது |
நீலம் |
காதலர் / காதலியிடம் காதலை சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருப்பது |
சிவப்பு |
ஏற்கனவே, ஒருவருடன் காதலில் இருப்பது |
வெள்ளை |
திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதைக் குறிப்பது |
ஆரஞ்சு |
காதலை இன்று வெளிப்படுத்த உள்ளதைக் குறிப்பது |
பிங்க் / இளஞ்சிவப்பு |
காதல் அழைப்பு வந்து, அதனை ஏற்றுக் கொள்வதைக் குறிப்பது |
பர்பிள் / க்ரே |
காதல் அழைப்பு வந்து, அதனை நிராகரிப்பது |
மஞ்சள் |
ஏற்கனவே காதலில் தோல்வியடைந்து, ஏற்ற சிறந்த ஜோடியைத் தேடுவது |
ப்ரௌன் |
ஏற்கனவே காதலில் தோல்வியடைந்து, சில காலங்களுக்கு காதல் வேண்டாம் என நினைப்பது |
கருப்பு |
காதலில் ஈடுபாடு இல்லாமல் அதனை நிராகரிப்பது |
இது போன்று ஆடைகளின் நிறத்தைக் கருத்தில் வைத்தே, ஒருவரது எண்ணங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…