அதிமுக இரண்டாக பிளந்து இபிஎஸ், ஓபிஎஸ் என பிரிந்து நிற்கிறது. இதற்கென ஒரு முடிவே இல்லாத நிலை ஏற்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு, இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதே சமயம், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரைத் தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே, இந்த பொதுக்குழு வழக்கு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. இதில் உச்சநீதிமன்றம் ஜூலை மாதம் 11 ஆம் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…