தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் உள்ள தரங்கம்பாடி வட்டங்களில் உள்ளவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி, பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டனர். இதில், சீர்காழியில் அதிக அளவிலான மழை பெய்து அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த நிலைக்கு மக்கள் உள்ளாகினர்.
இதனால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளும் பாதிப்படைந்தது. மேலும், ஆயிரக் கணக்கான விளை நிலங்களும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அளிக்கும் வகையில், அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…