சமூகத்தில் பெண்கள் சந்திக்காத சிக்கல்கள் ஏராளம். எந்த சிக்கல்கள் வந்தாலும், அதனை எதிர்த்து தைரியமாகப் போராடி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒன்றையே மையமாக வைத்து வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக, பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், உண்மையில் மனதளவிலும் உடலளவிலும் பெண்களே பலமானவர்கள் ஆவர். இத்தகைய எண்ணற்ற சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்ட பெண்களுக்கென தனிச்சிறப்புகள் உள்ளன. சிறப்பு மிக்க வகையில் பெண்களைப் போற்றும் வகையிலேயே பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றும் முயற்சியில் மிகக் கவனமாகவும், தீவிர ஆர்வத்துடனும் விளங்குவர். பொதுவாக, பெண்களைக் குறித்த முக்கிய பண்புகளில் பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வர் என்று கூறுவர். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இதில், பெண்கள் தங்களது தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்தி, வீட்டை மட்டுமல்லாமல் நாட்டின் நிலையை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
சமூகத்தில் பெண்கள் அவர்களுக்கென ஒரு வட்டத்தில் வாழ வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், இது அவர்களின் நிலையை உயர்த்தக் கூடிய வகையில் அமையாது. பெண்கள் சமூக, கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் முக்கியத்துவம் காத்து வருகின்றனர். இது பெண்கள் எந்நிலைக்குச் சென்றாலும், சமூக கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது.
இவ்வாறு எல்லா வகையான சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு அமையும் பெண்களைப் போற்றும் வகையிலேயே பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க பெண்கள் தினத்தை போற்றுவதற்கென பெண்கள் தனிப்போராட்டங்களை நடத்தி மார்ச் மாதம் 8 ஆம் நாளை மகளிர் தினமாகக் கொண்டாடுவதற்கான அறிவிப்பு பெறப்பட்டது. எனவே, இந்த சிறப்பு மிக்க நாளைக் கொண்டாடுவது முக்கியத்துவம் வாய்ந்தததாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…