Aadi 18 Valipadu in Tamil: ஆடி மாதம் என்றாலே எவ்வளவு விஷேசமானது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதிலும் ஆதி பெருக்கு (ஆடி பதினெட்டு) அன்னைக்கு வாங்கக்கூடிய நகைகள், சொத்துக்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக குடிக்கொண்டிருப்பாள் என்பது ஐதீகம். ஆனால், உங்களால் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியவில்லை என்றாலும்,, மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய சாதாரண பொருட்களை வாங்குவதன் மூலமும் பலனை பெறலாம். பொதுவாக, மகாலட்சுமி 108 பொருட்களில் குடிக் கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டு. அதில் ஒன்று தான் குண்டு மஞ்சள்.
இந்த குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. அதனால், ஆடி பதினெட்டு அன்னைக்கு குண்டு மஞ்சளை வாங்கி, அதை ஒரு பாத்திரத்தில் நிறைய நிரம்பும் படி வைத்து அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த நாளில் வீட்டில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைத்து வழிபடுங்கள். சுபகாரிய தடைகள், வருமானம் பெருகுவதில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி குடும்பம் வறுமை நீங்கும்.
இந்த நாளில் பெண்கள் தங்களது தாலியை மாற்றிக்கொண்டால் அம்மனின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேப்போல், அன்றைய தினத்தில் கடையிலிருந்து புதிதாக கல் உப்பு பாக்கெட்டை வாங்கி, வீட்டில் இருக்கும் உப்பு ஜாடி முழுவதும் தழும்ப நிரப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடிக்கொண்டிருப்பாள். எனவே, ஆடிப்பெருக்கு அன்னைக்கு இதை செய்ய மறந்துவிடாதீர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…