நாம் ஒவ்வொரு பொங்கலுக்கு சக்கரை மற்றும் வென் பொங்கல் சமைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அவற்றைக் காட்டிலும் சுவையும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அவல் பொங்கலை செய்து சாப்பிட்டிருக்க வாய்ப்பே இல்லை. அதை அவல், வெல்லம், ஏலக்காய், பச்சை கற்பூரம் என்று சத்தான பொருட்கள் கொண்டு தயாரிக்க படுகிறது. ஆகவே இந்த பொங்கலுக்கு ஆரோக்கியம் தரும் அவல் பொங்கல் செய்து சாப்பிட்டு பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பிடிக்கும்.
இந்த பதிவில் சுவையான அவல் பொங்கலை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பாப்போம்.
ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
அவல் - 1கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1 1/4 கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்
உண்ணக்கூடிய பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை
முதலில் குக்கரில் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அதே நேரத்தில் தனி ஒரு பாத்திரத்தில் அவலை தண்ணீரில் ஊற வைக்கவும்.
இப்போது பொங்கலுக்கு தேவையாக வெல்ல பாகுவை தயாரிக்க வேண்டும். அதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் பாசிப்பருப்பு, அவல் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதில் தயார் செய்த வெல்ல பாகை தேவையான அளவு ஊற்றி நன்கு கிளறி விடவும்.
அடுத்ததாக முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வருக்கவும். இதனை பொங்கல் தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக வாசனைக்கு ஏலக்காய் பொடியும், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கிண்டி விடவும். எல்லாம் ஒன்று சேர நல்ல பதத்துடன் இருக்கும் அவல் பொங்கல்.
அவ்ளோ தாங்க ஈஸியான வழிமுறைகளுடன் சுவையான இனிப்பு அவல் பொங்கல் தயராகி விட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…