Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Margazhi Naivedyam: சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி? | How to make Thengai Sadam in Tamil

Gowthami Subramani Updated:
Margazhi Naivedyam: சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி? | How to make Thengai Sadam in TamilRepresentative Image.

மார்கழி மாதம் என்றாலே ஆன்மீக மாதம் என்று தான் கூறப்படும். தமிழ் மாதத்தில் மார்கழி மாதம் சிறப்பு மிக்க மாதமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு உகந்த மாதமாகும். அதிலும் பெண்களுக்குரிய மாதம் என்றும் கூறலாம். பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசலில் கோலமிட்டு, நீராடி ஆண்டாளை வேண்டி திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைப் பாடி வேண்டிக் கொள்வர். இத்தகைய சிறப்பான மாதத்தில் மார்கழி மாத நெய்வேத்தியம் செய்வர். அந்த வகையில் இந்தப் பதிவில் தேங்காய் சாதம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேங்காய் சாதம்

எத்தனையோ புது புது விதமான டிஷ்கள் இருப்பினும், தேங்காய் சாதம் எப்போதும் ஸ்பெஷல் தான். தேங்காய் சாதம், உருளைக்கிழங்கு காம்பினேஷனுக்கு தனி ஒரு பட்டாளமே இருக்கும். தேங்காய் சாதம் என்ன அவ்வளவு கஷ்டமா? இது யாருக்குத் தான் தெரியாது? என சிலர் நினைப்பர். ஆனால், இவற்றில் தேங்காய் சாதத்தை சுவையாகவும், அனைவரும் விரும்பும் விதமாகவும் செய்வதற்கு ஒரு செய்முறை இருக்கிறது. இந்தப் பதிவில், சுவை மிக்க தேங்காய் சாதம் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் எப்படி செய்வது என்பதைப் பற்றியும் காணலாம்.

Margazhi Naivedyam: சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி? | How to make Thengai Sadam in TamilRepresentative Image

தேங்காய் சாதம் செய்யத் தேவையான பொருள்கள்

சமைத்த சாதம் – 1 கப்

துருவிய தேங்காய் – 3/4 கப்

சிவப்பு மிளகாய் – 1

பச்சை மிளகாய் – 3

முந்திரி பருப்பு – 5

வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

உளுத்தம்பருப்பு, சன்னா பருப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Margazhi Naivedyam: சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி? | How to make Thengai Sadam in TamilRepresentative Image

தேங்காய் சாதம் செய்முறை

கடாய் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை சூடாக்கி பிறகு கடுகு, சன்னா பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கீறிய சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், வேர்க்கடலை மற்றும் முந்திரியைச் சேர்க்கவும்.

இதில், பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து, சிறிது பிரவுன் நிறம் வரும் வரை நன்கு கிளறி அதனுடன் உப்பு சேர்க்க வேண்டும்.

இப்போது சமைத்த அரிசியைச் சேர்த்து, பதமாக கிளறி பின் சூடாகப் பரிமாறவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்