தை பொங்கல் திருநாளில், விதவிதமான பொங்கல் செய்வது வழக்கம். பொதுவாக பொங்கல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று, அதிலும், கற்கண்டு பொங்கல் என்றால் சொல்லவே தேவையில்லை. அற்புதமான சுவையுடன், ஆரோக்கியத்தையும் தரக்கூடியது இந்த கற்கண்டு பொங்கல். சரி, இந்தப் பதிவில் கற்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
Representative Image
கல்கண்டு பொங்கல்
பொங்கல் என்றால் மிகவும் இனிப்பு மிகுந்த ஒரு கடவுள் பிரசாதம் மற்றும் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகை. கல்கண்டு என்றால் இனிப்பு அதனுடன் பொங்கல் சேர்த்தால் மிகவும் இனிப்பு கலந்த ஒரு உணவாக மாறிவிடும். சரி வாங்க..கல்கண்டு பொங்கல் எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் காணலாம்.
Representative Image
கல்கண்டு பொங்கல் செய்வதற்குத் தேவையான பொருட்கள்
பச்சை அரிசி -1 கப்
பருப்பு -1 டீஸ்பூன்
பால்- 2 கப்
கல்கண்டு -2 கப்
குங்குமப்பூ
முந்திரிப் பருப்பு
ஏலக்காய்த் தூள்
நெய்-3 டீஸ்பூன்
Representative Image
செய்முறை
- முதலில் பாலை எடுத்துக் கொண்டு அதில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.
- அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவியைப் பின் 2 கப் அளவு பால் மற்றும் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு நன்கு வேக வைக்கவும்.
- நன்கு வேக வைத்தப் பின் குக்கரிலிருந்து அரிசியை வெளியே எடுத்து நன்றாக மசிக்கவும்.
- அதன் பிறகு கல்கண்டு மற்றும் பாலுடன் ஊற வைக்கப்பட்ட குங்குமப்பூவை எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் அடுப்பை மிதமானத் தீயின் அளவில் சமைக்கவும்
- அதன் பின் சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதமுள்ள நெய்யைச் சூடாக்கி, முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரிசி கலவையில் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். கல்கண்டு பொங்கல் தயார் சூடாகப் பரிமாறவும்..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…