Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்.. | First Trimester Tests During Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan July 04, 2022 & 21:00 [IST]
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்.. | First Trimester Tests During Pregnancy in TamilRepresentative Image.

First Trimester Tests During Pregnancy: கர்ப்பக்காலத்தின் போது ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியம். இதை சரியான முறையில் கடைப்பிடித்தால் பிரசவக்காலத்தில் எந்தவித பிரச்சனையும் இன்றி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க முடியும். பொதுவாக ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அவ்வகையில், முதல் மூன்று மாத காலங்களில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

சிறுநீர் பரிசோதனை

இது தான் முக்கியமான மற்றும் முதன்மையான (urine test for pregnancy) பரிசோதனையாகும். இது எல்லாப் பெண்களுக்கும் தெரிந்த ஒரு விஷயம். இந்த பரிசோதனை தான் கர்ப்பத்தினை உறுதி செய்கிறது. ஒரு பெண் மாதவிடாய் தள்ளிபோகும் போது சிறுநீர் பரிசோதனை மூலம் கருவை உறுதி செய்து கொள்கிறாள். அதாவது, ஹியூமன் கோரியானிக் கொனடோ ட்ராபிக் ஹார்மோன் இருந்தால் கருவுற்றிருப்பது உறுதி ஆகும். 

கருவுற்றிருப்பதை அறிந்து மருத்துவரிடம் காண்பிக்க செல்லும் போது சிறுநீர் மாதிரியை எடுத்து நோய்த்தொற்று இருக்கிறதா, கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள். மேலும், நஞ்சுக்கொடியில் உற்பத்தியாகும் ஹார்மோன் மற்றும் சிறுநீரில் உள்ள குளுக்கோஸ் அளவு போன்றவற்றையும் பரிசோதிப்பார்கள். 

இரத்தப் பரிசோதனை

கருவுற்ற பெண்ணுக்கு செய்யப்படும் இரத்த பரிசோதனையில் ஹெப்படைடிஸ் பி, சின்னம்மை, ரூபெல்லா, ஹூமோகுளோபின் அளவு போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைவாக இருப்பதை கண்டுபிடித்து பிரசவ நேரத்தில் அதிக உதிரபோக்கு ஏற்படுவதை தடுக்க இயலும். அதோடு, கர்ப்பம் தறித்த பெண்ணின் உடலில் போதுமான அளவு இரத்தம் உள்ளதா என்பதையும் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும். 

கர்ப்பிணிக்கு இரத்த சோகை பிரச்சனை தீவிரமாக இருந்தால் அது பிரசவத்தின் போது அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும். அதனால், அதற்கேற்ப இரத்தம் செலுத்த வேண்டும். இவ்வாறு இரத்த பரிசோதனை செய்துக் கொள்வதன் மூலம் இரத்த வகையை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளலாம். 

மேலும், தாயிக்கும் சேயிக்கும் இருக்கும் இரத்தம் ஆர்.ஹெச். நெகட்டிவ், ஆர்.ஹெச். பாசிட்டிவ் என்று மாறி இருந்தால், பிரசவ நேரத்தில் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்கவும் இந்த இரத்த பரிசோதனை (blood test for pregnancy) உதவும்.  

பேப்ஸ்மியர் பரிசோதனை

ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் மருத்துவரிடம் செல்லும் போது எடுக்கப்படும் வழக்கமான பரிசோதனைகளில் பேப்ஸ்மியர் பரிதோதனையும் ஒன்று. கர்ப்பப்பை வாய் செல்கள், பால்வினை நோய் (எஸ்.டி.ஐ) அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. 

ஏனென்றால் எஸ்.டி.ஐ உடன் பிறக்கும் குழந்தைகள் கண்களில் குறைபாடு அல்லது நிமோனியா உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

இரத்த சர்க்கரை பரிசோதனை

பொதுவாக இந்த பரிசோதனை இரண்டாவது ட்ரைமெஸ்டரில் தான் செய்வார்கள். ஆனால், இந்த காலத்தில் நீரிழிவு நோய் அதிகரித்துவிட்டதால், கருவுற்ற ஆரம்பத்திலேயே செய்யப்படுகிறது. கருவுற்றதற்கு முன்னாடியே இரத்த சர்க்கரை நோய் இருந்தாலும், அல்லது சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடித்து விடலாம். 

அதுமட்டுமல்லாமல், இந்த பரிசோதனையின் (blood sugar test for pregnancy) மூலம் சர்க்கரை நோய் இருந்தால் அதற்கேற்ப சிகிச்சைகளை பின்பற்றி, இரத்த சர்க்கரை நோயை தவிர்க்கவோ அல்லது கட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ முடியும். 

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்

பொதுவாக இந்த பரிசோதனை (ultra sound test) கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காக்வும், கர்ப்பிணியின் பிரசவத் தேதியை கணக்கிடவும் செய்யப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் இதயத்துடிப்பையும் வளர்ச்சியையும் தெரிந்துக் கொள்ளலாம். 

மற்ற பரிசோதனைகள்

❖ கர்ப்பிணி பெண்ணுக்கு தைராய்டு பிரச்சனை (thyroid test in pregnancy) இருந்தால், அது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கும். இதை தடுக்க தைராய்டு டெஸ்ட் செய்யப்படும்.

❖ கர்ப்பிணி எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்து உள்ளாரா என்பதை தெரிந்துக்கொள்வதற்கு எய்ட்ஸ் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

❖ குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கிறதா, ட்ரைசோமி 18, பனிக்குட நீர் போன்ற பிறவிக்கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதையும் அறிய நுச்சல் ஸ்கேன் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பரிசோதனை மூலம் குழந்தையின் குரோமோசோம் குறைபாடுகளையும் கண்டறிய இயலும்.

❖ குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகளை உண்டாக்கும் சிபிலிஸ் என்னும் பால்வினை நோய் கர்ப்பிணிக்கு இருக்கிறதா என்று அறிந்துக்கொள்ள வி.டி.ஆர்.எல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. 

இந்த பரிசோதனைகள் அனைத்தும் வயது, ஆரோக்கியம், பிரசவம் பொறுத்து மாறுபடலாம். எனவே, அனைத்து கர்ப்பிணிகளும் இந்த பரிசோதனைகள் (Pregnancy Tests in Tamil) பற்றி நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்