ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும் என்றாலும் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை கவனிக்க தவறிவிடுகிறார்கள். இதற்கு காரணம் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டால் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியாததே. சரி, வாங்க நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.
முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், மாதவிடாய் தவறுதல் தான் கர்ப்பத்தின் முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு சில பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சியின்மையாலும் மாதவிடாய் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆனால், 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போனால் அது கர்ப்பத்தின் அறிகுறியே.
மார்னிங் சிக்னஸ் என்று சொல்லக்கூடிய குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படலாம். ஒரு சிலருக்கு இந்த உணர்வு படுக்கையை விட்டு எழும் போதே ஆரம்பமாகலாம். ஒரு சிலருக்கு மாலை நேரங்களிலோ அல்லது இரவு வேளைகளிலோ கூட ஏற்படலாம். அதேபோல் பலருக்கு நாள் முழுவதும் கூட குமட்டல், வாந்தி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறியே. பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சிறுநீரும் அதிகமாக வெளியேறும். ஆனால் கர்ப்பிணி பெண் சிறுநீர் அடக்கி வைக்காமல் அவ்வப்போது சிறுநீர் கழிப்பது உடலுக்கும் மனதுக்கும் பலம் கொடுக்கும்.
அதீத சோர்வு:
மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது வழக்கத்தை விட அதிகமாக சோர்வு ஆட்கொண்டால் அதற்கு கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடலில் உருவாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும், இதனால் இந்த சோர்வு ஏற்படுகிறது.
எடை அதிகரிப்பு:
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது பொதுவான ஒன்றே. சரிவர சாப்பிடாமல் இருந்தும், உடல் எடை திடீரென்று அதிகரித்தால், அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
உணவு மீது வெறுப்பு மற்றும் ஆசை:
கர்ப்பகால ஹார்மோன்கள் பிடித்த உணவை கூட வெறுக்க செய்துவிடும். அதாவது, உங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகள் கூட பிடிக்காமல் போகலாம். பிடிக்காத உணவுகள் பிடிக்க தொடங்கும். இதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியே.
கருத்தரிக்கும்போது ஒவ்வொரு பெண்களும் அவர்களது மார்பகத்திலே சில மாற்றங்களை உணர முடியும். அதாவது, குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரப்பதற்கான ஹார்மோன்கள் உடலில் தயாராவதால், திடீரென்று மார்பங்கள் பெரிதாவது போன்ற உணர்வும், சில நேரங்களில் வழக்கத்தைவிட கனமாக இருப்பது போன்றும், மென்மையாக இருப்பது போன்றும் தோன்றும். மார்பக காம்புகள் தடித்து, கருமையாக மாற தொடங்கும். இந்த அறிகுறிகள் எல்லாம் பெண் கர்ப்பம் தரித்துவிட்டதை உறுதி செய்யக்கூடிய முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
கர்ப்ப காலத்தில் இரத்த நாளங்கள் விரிவடைய துவங்கும். இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, தலைச்சுற்றல் மற்றும் இலேசான தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதுவும் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாகும். முதல் மூன்று மாதங்கள் வரை இந்த உணர்வு இருக்கும். ஒருவேளை தலைச்சுற்றலுடன் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
கர்ப்பத்தின் ஆரம்பத்தில் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியை அனுபவிக்கலாம். ஏனென்றால் குழந்தைக்கு ஏற்றவாறு கருப்பை விரிவடையும் இதனால் முதுகுவலி ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு வயிற்று பிடிப்புக்கள் மற்றும் அடிவயிற்று வலி கூட ஏற்படும். அடிவயிற்றில் வலி அளவுக்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…