இந்திய வழக்கப்படி எந்த ஒரு பண்டிகை அல்லது நல்ல நாட்களில் ஸ்வீட் சாப்பிட வேண்டும். அது நம் சந்தோசத்தை மேலும் அதிகரிக்க உதவும். அதே போல வரும் புத்தாண்டில் நம்முடைய குடும்பத்தாருக்கு ஸ்வீட் செய்து கொடுத்து மகிழ்வோம். ஆனால் எப்பையும் போல குலாப் ஜாமுன், மைசூர் பாக்கு இப்படி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்னு ஆசையா இருக்கா. கவலை வேண்டாம், இந்த பதிவில் பாயாசத்தை கொஞ்சம் மாறுதலாக எப்படி செய்யலாம் என்று பாப்போம்.
கேரமல் பாயாசம் அல்லது கேரமல் கீர் செய்வது எப்படி? நாம் எப்பையும் செய்யும் பால் பாயாசத்தை போல தான் ஆனால் மூன்று முக்கிய பொருட்களை கூடுதலாக சேர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
தயாரிப்பு நேரம் - 10 நிமிடம் || சமைக்கும் நேரம் - 35 நிமிடங்கள் || 5-6 பேருக்கு பரிமாறலாம்.
முழு கிரீம் பால் - 4 கப்
சர்க்கரை - 1/2 கப்
அலங்கரிக்க தேவையான நட்ஸ்கள்
அரிசி அல்லது தினை அல்லது பாசுமதி அரிசி - 3 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
நீங்கள் எடுத்துக்கொள்ளும் அரிசியை அலசி 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் நெய்யை எல்லா பக்கமும் சமமாக தடவிய பின்னர் 1/4 கப் சர்க்கரையை சேர்க்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. அடுப்பை மீடியம் அளவில் வைத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை கேரமலிஸ் செய்து பொன்னிறமாக, அம்பர் நிறமாக மாறும் வரை வைத்திருக்கவும்.
நிறம் மாறிய உடன் பாலை ஊற்றவும். ஒரு முறை நன்கு கிண்டவும்.
பிறகு தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அரிசியை குக்கரில் போடவும்.
பின்னர் குக்கர் மூடியை மூடி, ஒரு விசில் வந்த உடன் அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். ஒருவேளை இந்த அம்சம் உங்களிடம் இல்லை என்றால் தோசை கல்லை நன்கு சுட வைத்து குக்கரை அதன் மீது 30 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
கேஸ் போன பிறகு, ஒரு கப்பில் மாத்தி உங்களுக்கு பிடித்த நட்ஸ்-களை பொடியாக நறுக்கி பாயசத்தின் மீது தூவி பரிமாறுங்கள்.
அனைவருக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும், இந்த பாயாசம் செய்து புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…