Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாவில் எச்சில் ஊறும் கறி தோசை செய்வது எப்படி? | Kari Dosai Seivathu Eppadi

Gowthami Subramani Updated:
நாவில் எச்சில் ஊறும் கறி தோசை செய்வது எப்படி? | Kari Dosai Seivathu EppadiRepresentative Image.

மதுரை மாநகரத்தின் சிறப்புகளில், விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் ஒன்றாகும். அதன் படி, இறைச்சி பிரியர்களுக்கு நாவில் எச்சில் ஊறும் வகையில் அமைவது மதுரை கரி தோசை ஆகும். சாதாரண தோசை, ஆம்லெட், காரமான மட்டன் கீமா போன்றவற்றின் கீழ் கரி தோசையும் அமையும். இந்த கரி தோசையை நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்பதை இதில் பார்க்கலாம்.

நாவில் எச்சில் ஊறும் கறி தோசை செய்வது எப்படி? | Kari Dosai Seivathu EppadiRepresentative Image

செய்யத் தேவையான பொருள்கள்

தோசை மாவு

மிளகு – 2 தேக்கரண்டி

முட்டைகள் – 2

எண்ணெய் -  தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

அரைத்த ஆட்டிறைச்சி – 200 கிராம் மட்டன் கீமா

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 அல்லது 2

எண்ணெய் / நெய் – 2 டீஸ்பூன்

மிளகு தூள் – ½ தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

நாவில் எச்சில் ஊறும் கறி தோசை செய்வது எப்படி? | Kari Dosai Seivathu EppadiRepresentative Image

செய்முறை

✤ முதலில், குக்கரில் எண்ணெயை சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

✤ இதில், தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

✤ இத்துடன், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகு தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

✤ இவை எல்லாவற்றையும் கலந்து 3-4 நிமிடங்கள் அப்படியே வேக வைக்க வேண்டும்.

✤ அதன் பிறகு, துண்டு துண்டாக வெட்டி எடுத்து வைக்கபப்ட்ட இறைச்சியைச் சேர்த்து, 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

✤ இதனை மூடி வைத்து, 2 முதல் 3 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்.

✤ அதன் பின், மூடியைத் திறந்து மட்டன் கீமாவை மீண்டும் 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

✤ தனியாக பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் 2 முட்டைகளை உடைத்து, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

✤ பிறகு, தோசைக் கல்லை சூடாக்கி, அதன் மீது மாவை ஊற்றி அதில் முட்டைக் கலவையை ஊற்ற வேண்டும்.

✤ பின் அதில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவு, அதன் மேல் வேக வைத்த மட்டன் கீமாவைச் சேர்க்க வேண்டும்.

✤ இதில், வாசனைக்காகக் கொத்தமல்லி இலையைத் தூவவும். இதன் அடிப்பகுதி, மிருதுவாக இருக்குமாறு சமைக்க வேண்டும்.

✤ தோசையைப் புரட்டி, ஒரு நிமிடம் சமைக்க வேண்டும். இதனைச் சூடாகப் பரிமாறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்