பாயாசம் என்றாலே பாசி பருப்பு பாயாசம் தான நினைவுக்கு வரும். ஆனால் பச்சை பயிறு சேர்த்து ஆரோக்கியம் மற்றும் சுவையாக பாயாசம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பாப்போம். உடலுக்கு சத்தான அனைத்து பொருட்களும் பயன்படுத்தி செய்யபோகும் இந்த பாயாசம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.
உடலுக்கு தெம்பும் ஆரோக்கியம் சேர்க்கும் நாவில் எச்சு ஊற வைக்கும் பச்சை பயிறு பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தயாரிப்பு நேரம் - 10 நிமிடம் || சமைக்கும் நேரம் - 30 நிமிடங்கள் || 3-4 பேருக்கு பரிமாறலாம்.
பச்சை பயிறு - 1/4 கப்
வெல்லம் - 1/2 முதல் 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
முந்திரி - 7 - 8
பால் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பச்சை பயிரை 5 நிமிடம் நன்கு வறுத்து விட்டு, குக்கரில் மாற்றவும். 3/4 கப் தண்ணீர் சேர்த்து 6-7 விசில் விடவும்.
மறுபக்கம் பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து பாகு ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். வேகவைத்த பச்சை பயிரை அத்துடன் சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
இப்போது தேங்காய் மற்றும் முந்திரியை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதனை பச்சை பயிறுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
உங்களுக்கு வேண்டும் என்றால் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுப்பை நிறுத்திய உடன் காய்ச்சிய சூடான பாலை அத்துடன் சேர்த்து கிண்டவும்.
அவ்ளோ தான் பச்சை பயிறு பாயாசம் ரெடி. நல்ல சுட சுட இருக்கும் போது கப்பில் மாற்றி குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…