ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமியை நாகபஞ்சமி என்பார்கள். இந்த விஷேசமான நாளில் விரமிருந்து கோயிலில் உள்ள நாக தெய்வங்களையோ அல்லது வீட்டில் நாக பொம்மையை வைத்தோ வழிபாடு செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் நாக தோஷம் நீங்குவதோடு ஆயுள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், இந்த மங்களகரமான நாளில் நாக தேவதைக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் ஒரு பிரசாதம் இது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஆடி பதினெட்டு அன்னைக்கு கட்டாயம் வாங்க வேண்டிய ஒரு பொருள்…
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
சுக்கு - 1/2 ஸ்பூன்
கோதுமை மாவு - 1½ கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ஆயில் - 2 ஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊறிய கடலைப் பருப்பை குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் விட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒருவேளை, பருப்பு ஊறவைக்க நேரமில்லை என்றால் 7-8 விசில் விட்டு எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு கடாயை எடுத்து அதில் வேக வைத்த கடலை பருப்பு மற்றும் துருவி வைத்திருக்கும் வெல்லம் இரண்டையும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிறிது நேரம் கிளறிக் கொண்டே இருந்தால் வெல்லம் உருகி மாவு போல மாறும். இப்போது சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபி ‘ஆடி தேங்காய் பால்’ செய்வது எப்படி?
இப்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து அதோடு சிறிது உப்பு, 2 ஸ்பூன் சூடான நெய் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். 10 நிமிடம் அதை ஊறவிடவும்.
இப்போது, அந்த மாவை உங்களுக்கு எத்தனை உருண்டை வேண்டுமோ அத்தனை உருண்டை பிடித்து, பூரியை போல தேய்த்துக் கொள்ளுங்கள். இப்படி எல்லா உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின், ஒவ்வொரு மாவுக்கு நடுவிலும் நாம் தயாரித்து வைத்த வெல்லம் கலவையை வைத்து மடித்துக் கொள்ளவும். இப்படி எல்லாத்தையும் மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆடி பெருக்கு வழிபாடு முறை, தாலி கயிறு மாற்றும் நேரம்…
இதை வேக வைக்க வேண்டும். அதற்கு இட்லி பாத்திரத்தை ஒன்று எடுத்து, 3 லிட்டர் தண்ணீர் நிரப்பி, கொதித்த உடன் இட்லி தட்டை எடுத்து அதன் மீது வாழை இலையை வட்டமாக நறுக்கி போட்டு கொள்ளவும்.
நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை எடுத்து அதில் அடுக்கு 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூடான சுவையான ஸ்வீட் ரெசிபி ரெடி...!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…