பாலியல் அடிமையாதல் என்பது பொதுவாக ஆண், பெண் வேறுபாடின்றி சந்திக்கும் பிரச்சனையாக இருந்துவருகிறது. முன்பெல்லாம் கூட ஆபாச படங்கள் பார்ப்பதன் அளவும் வாய்ப்பும் ரொம்பவே குறைவாகவே இருந்தது. ஆனால், இந்த கலியுகத்தில் ஆபாச படங்களும், உடலுறவு சார்ந்த விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் நிரம்பி கிடக்கின்றன.
இதனாலையே நிறைய பேர் பாலியல் அடிமையாதலில் மிகவும் சுலபமாக சிக்கிக் கொள்கின்றனர். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் சிறிய வயதினரும் இப்பிரச்சனைக்கு ஆளாகுவது தான். ஒருவர் பாலியல் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டால், என்ன மாதிரியான பின்விளைவுகளை சந்திப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு நபர் பாலியலுக்கு அடிமையாவதற்கு ஆபாச படங்கள் பார்ப்பது, சுயஇன்பம் செய்தல், உடலுறவு பற்றி தானே கற்பனை செய்துக்கொள்ளல் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. செக்ஸ் போதைக்கு அடிமையாகிவிட்டால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய துணைக்கும் குடும்பங்களுக்கும் பல பிரச்சனைகளை விளைவிக்கும்.
பாலியல் அடிமைத்தனம் ஒரு நபரின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், பாலியல் உணர்வு முழுமையடையாத போது, போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு தள்ளிப்படும்.
பொதுஇடங்களில் இயல்பாக நடந்துக்கொள்ள முடியாமல் போகலாம். அதாவது, எதிர்பாலினத்தவரை பார்க்கும்போது பாலுணர்வு எண்ணம் தான் முதலில் வரும்.
கவலை, குற்ற உணர்வு, மனச்சோர்வு, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். சில சமயங்களில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய பிளவுகளை ஏற்படுத்தலாம்.
அதிகமாக பாலியல் உணர்வுக்கு அடிமையாகும்போது பணம் கொடுத்து இன்பத்தை அனுபவிக்கும் அளவிற்கு சென்றுவிடும். இதனால் பல நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
இதிலிருந்து தப்பிக்க பாலியல் நிபுணர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை கேட்பது ஒன்றே வழி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…