நம்மில் பலரும் படிக்கும் போது தூக்கம் வருவது என்பது இயல்பான ஒன்று என்றாலும் அதைப் பழக்கம் ஆக மாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் படிக்கும் போது தூக்கத்தைத் தவிர்க்க மிகவும் கடினமாக இருக்கும்.
அதற்குப் பல காரணங்கள் உள்ளது. படிக்கும் போது வசதியான இருக்கை மற்றும் பிடிக்காத பாடம் படித்தால் தூக்கம் வருவது என்று பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் படிக்கும் போது வரும் தூக்கத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ அடுத்த நாள் படிக்க வேண்டும் என்றால் முந்தைய நாள் நன்றாக 5 லிருந்து 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். தூக்கம் சரியாக இல்லை என்றால் அடுத்த நாள் படிக்கும் போது தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
✤ படிக்கும் போது தூக்கம் வருவதற்கான காரணம், நீங்கள் போதுமான அளவிற்குத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். தண்ணீர் சரியான அளவிற்கு மூளைக்குச் செல்லவில்லை என்றால் மூளை சுருங்கும் அதனால் உங்களுக்குத் தூங்கும் உணர்வுகள் ஏற்படும்.
✤ இதைத் தவிர்ப்பதற்குத் தினமும் 1லிருந்து 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் படிக்கும் போது வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம். பொதுவாகத் தண்ணீர் குடிப்பதனால் உடலில் அனைத்து பகுதிகளும் நன்றாகச் செயல்படும்.
✤ உங்களுக்குப் படிக்கும் போது தூக்கம் வந்தால் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சிறிய உடல் பயிற்சி இரண்டு நிமிடங்கள் செய்தால் தூக்கம் வராமல் உடலுக்குப் புத்துணர்ச்சியாக இருக்கும்.
✤ பகலில் மற்ற நாட்கள் தூங்குவதால் படிக்கும் நாட்களில் தூக்கம் வரும் அதனால் நீங்கள் எப்பொழுது பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். பகல் நேரம் தூக்கம் என்பது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடல் எடை அதிகரிப்பில் ஆரம்பித்துப் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் பகல் நேரம் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
✤ படிக்கும் போது ஏற்படும் தூக்கத்தைத் தவிர்ப்பதற்குப் பல வழிகள் உள்ளது. இந்த பதிவில் 5 வழிகள் மூலம் படிக்கும் போது வரும் தூக்கத்தைத் தவிர்ப்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ நீங்கள் முதலில் படிப்பதற்கு ஆரம்பிக்கும் போது ஒரு அட்டவணையிட்டு இன்று காலையிலிருந்து மாலை வரை படிக்கும் பாடங்களை வரிசைப்படுத்துங்கள்.
✤ அதில் முதல் பாடத்தைப் படித்த பிறகு, ஒரு சிறிய இடைவேளை விட்டுப் படியுங்கள். இதனால் படிக்கும் போது தூக்கம் வராமல் மற்றும் படிப்பதற்கு ஒரு உத்வேகம் கிடைக்கும்.
✤ இதனால் பாடங்கள் எளிதில் படித்து முடிக்க முடியும். அட்டவணையை முழுவதுமாக படித்த பிறகு, சிறிய நேரம் கழித்துப் படித்ததை நினைவுபடுத்தினால் மறக்காமல் இருக்கும்.
✤ அட்டவணையிட்டுப் படிக்கும் போது உங்களுக்கு ஒரு உத்வேகமாகவும் மற்றும் தூக்கம் வராமல் படிப்பதற்கு உதவியாக இருக்கும். இந்த முறையைத் தினமும் படிக்கும் போது பயன்படுத்தினால் தூக்கம் வரும் பழக்கங்கள் வராது.
✤ படிக்கும் போது உணவை அளவாகச் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் தூக்கம் கட்டாயமாக வரும். படிக்கும் போது பிடித்த உணவுகள் சாப்பிடாமல் உடலுக்கு எது நன்மை தரும் எனப் பார்த்து அளவாகச் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
✤ உடலுக்குச் சத்துகள் தரும் புரோட்டின், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மூளைக்கு மிகவும் நல்லது.
✤ படிக்கும் போது அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது செரிமான அடைவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தும். அசைவ உணவுகள் சாப்பிடுவதால் மிகவும் சோர்வாகவும் மற்றும் தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
✤ தொடர்ந்து படிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் படிக்க ஆரம்பித்து சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
✤ இந்த இடைவேளை நேரத்தில் அமைதியாக அமர்வது மற்றும் பிடித்த பாடல் கேட்பது போன்றவை செய்யலாம். இதனால் மீண்டும் படிக்கத் துடங்கும் போது புத்துணர்ச்சியாகவும் மற்றும் வேகமாகவும் படிக்க முடியும்.
✤ முதலில் படிக்கும் போது பிரித்துப் படிக்க வேண்டும். முதலில் பாடங்களை அனைத்தையும் சேர்த்துப் படித்தால் கூட தூக்கம் வரும். அதனால் முதலில் சிறிய சிறிய பாடங்கள் ஆகப் பிரித்துப் படித்தால் ஒரு பாடம் பிடிக்கவில்லை என்றாலும் மற்ற பாடங்கள் மாற்றிப் படிக்கலாம்.
✤ இதனால் தூக்கம் வருவதைத் தவிர்க்கலாம். பிரித்துப் படிக்கும் போது பெரிய பகுதியைக் கூட சிறியதாகப் படிக்கும் போது எப்பொழுது கடினமாக இருக்காது.
✤ படிக்கும் போது தூக்கம் வருவது போல் இருந்தால் உடனே எழுந்து சென்று முகத்தை நன்றாகக் கழுவி விட்டு வந்து படிக்க வேண்டும். இதனால் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். சிறிய தூரம் நடந்துவந்தால் தூக்கம் கலைந்து விடும் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.
✤ புத்தகத்தில் படிக்காமல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் படித்தால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை நகர்த்தி மேல் உள்ள சுவர் அல்லது செடியைப் பார்த்தால் மூளைக்கு ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும்.
✤ படிக்கும் போது தூக்கம் வருவது போல் இருந்தால் உடனே சாக்லேட் மற்றும் உங்களுக்குப் பிடித்தவை சாப்பிடலாம். அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
✤ படிக்கும் போது தனியாகப் படிக்காமல் உங்களது நண்பர்களுடன் சேர்ந்து படித்தால் தூக்கம் வராமல் படிக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…