வெள்ளிப் பொருள்களைக் கழுவுவது என்பது நம்மில் பலரும் கடைகளில் இருக்கும் பவுடர்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதில் முழுவதுமாக பளபளப்பாக வராது. அதில் பல ரசனைகள் பயன்படுத்தித் தயாரிப்பதால் அதை நம் சாப்பிடும் தட்டுகள் அல்லது மற்ற பாத்திரங்களைக் கழுவினால் அதில் சிறிதளவு இருந்தால் கூட நம் உடலுக்குப் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்ப்பதற்கும், மற்றும் வீட்டில் உள்ள பொருள்கள் பயன்படுத்தி வெள்ளி பாத்திரங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ வெள்ளியில் உள்ள கறைகளை தண்ணீர் பயன்படுத்தாமல் சுத்தம் செய்வதற்கு இந்த சாஸ் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
✤ முதலில் தக்காளி சாஸ்ஸை ஒரு டிஷ்யூ பேப்பர் எடுத்து கறைகளில் உள்ள இடத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
✤ அதற்குப் பின், மற்றொரு டிஷ்யூ பேப்பர் எடுத்துத் துடைத்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் முழுவதுமாக சுத்தமாகும்.
✤ கறைகள் போகாமல் இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தி 30 முதல் 40 நிமிடங்கள் ஊற வைத்த பின் அதைத் துடைத்தால் முழுவதுமாக கறைகள் போகும்.
✤ தினமும் பயன்படுத்தும் வெள்ளி பொருள்களைச் சுத்தம் செய்வதற்கு இந்த கலவையைப் பயன்படுத்தலாம். அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தும் பொருள்களையும் இந்த கலவையைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழம் பிழிந்து கொள்ளவும்.அதில் உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொண்டால் கலவை தயார்.
✤ வெள்ளி பாத்திரங்களை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் இந்த கலவை முழுவதுமாக ஊற்றி 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
✤ அதன் பின், அந்த பாத்திரங்களைத் தண்ணீர் ஊற்றி முழுவதுமாக கழுவினால் பாத்திரங்கள் முழுவதுமாக புதிய பாத்திரம் போல் பளபளப்பாக இருக்கும்.
✤ வருடத்திற்கு ஒரு முறை மற்றும் பழைய வெள்ளி பாத்திரங்களை இந்த வினிகரை பயன்படுத்தி எளிதில் கழுவ முடியும்.
✤ இந்த கலவை செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் போக்கிங் சோடா மற்றும் வெந்நீர், வினிகர் சேர்த்துக் கலந்து கொண்டு பாத்திரங்களை இந்த கலவையில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
✤ அதை எடுத்துக் குளிர்ந்த நீரில் கழுவினால் வெள்ளி பாத்திரங்கள் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
✤ பாத்திரங்கள் பளிச் என புதுப் பாத்திரம் போல் மின்னுவதற்கு , 2 டீஸ்பூன் அளவிற்கு போக்கிங் சோடா மற்றும் அரை கப் அளவிற்கு வினிகர், மிதமான சூட்டில் உள்ள வெந்நீர் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
✤ அந்த கலவையில் பாத்திரங்கள் சேர்த்து நன்றாக 2 மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
✤ அதற்குப் பின் , அதை குளிர்ந்த நீரில் கழுவினால் பழைய பாத்திரங்கள் கூட புது பாத்திரங்களாக மாறிவிடும்.
✤பல வடிவமைப்புகள் கொண்ட பாத்திரங்களைக் கழுவுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் பாத்திரங்கள் மற்றும் வெள்ளியில் கடவுள் சிலைகள் கழுவுவதற்குக் கடினமாக இருக்கும்.
✤அந்த பாத்திரங்களை கழுவுவதற்கு இந்த கார்ன்ஃப்ளார் கலவையைப் பயன்படுத்து எளிதில் கழுவ முடியும்.
✤ இந்த கலவைக்கு முதலில் கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
✤ அந்த பாத்திரத்தில் இந்த பேஸ்ட்டை முழுவதுமாக பூசிக்கொண்டு அதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
✤ அதன் பின், ஒரு துணியில் அந்த கலவை நன்றாகத் துடைத்தால் பாத்திரங்கள் பளிச் என்று மின்னும்.
✤ வீட்டில் வேறு பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் சோப் பவுடர் வெள்ளி பாத்திரத்தில் அப்படியே பயன்படுத்தாமல் அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
✤ அதில் பாத்திரங்களைச் சேர்த்து 10 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். 10 நிமிடங்கள் பின், அதில் அழுக்குகள் மற்றும் கறைகள், எண்ணெய்ப் பசையுள்ள பாத்திரங்களை எடுத்துக் கொள்ளவும்.
✤ அந்த பாத்திரங்களை ஸ்கிரப்பிங் ஸ்பாஞ் வைத்து நன்றாகத் தேய்த்துக் கழுவவும் கழுவிய பின்,காட்டன் துணியில் துடைத்தால் பளிச் என இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…