தைப் பொங்கல் திருநாளில் விதவிதமான பொங்கல் வகைகள் செய்து இறைவனுக்குப் படைத்து வழிபடுவோம். பொங்கல் பண்டிகைக்கு உண்டான நான்கு நாள்களுமே சிறப்பான நாள்களாகும். பொங்கல் தினத்திற்கு உரித்தான காணும் பொங்கல் தினத்தன்று, வீட்டில் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்ச்சி அடைவர். காணும் பொங்கல் திருநாளில் பல்வேறு விதமான விருந்துகள் வைத்து உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவர்.
காணும் பொங்கல் அன்று, கரி விருந்து இல்லாமல் எப்படி? கரி நாள் என்று அழைக்கப்படும் காணும் பொங்கல் தினத்தில், வீட்டில் என்ன புதியதாக செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பர். அந்த வகையில், சமைக்கத் தெரியாதவர்களும் கூட எளிதாக சமைக்கும் வகையில் அமையும், சோம்பேறி சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம்.
சிக்கன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சிக்கன் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறி மசால் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
✤ முதலில், சிக்கனை நன்கு கழுவி அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ பின், அதில் மேலே கூறப்பட்ட அனைத்து பொருள்களையும் (எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் சிக்கனைத் தவிர்த்து) சேர்த்துக் கொள்ளலாம்.
✤ இதனை நன்றாகக் கையால் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
✤ பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
✤ பின் அதன் மேலே பாத்திரம் ஒன்றால் மூடி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை மிதமான தீயினால் வேக வைக்க வேண்டும்.
✤ இவ்வாறு வேக வைக்கும் போது இடையில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடலாம்.
அதன் பிறகு சுவையான சோம்பேறி சிக்கன் தயாராகி விடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…