நைட் நேரம் தான் நாம் அதிகமா சப்பாத்தி சாப்பிடுவோம். ஆனால் எப்பையும் போல உருளைக்கிழங்கு, தக்காளி போன்று குருமா செய்து சாப்பிடுவது சலுப்பாக இருக்கிறதா? அதுக்கு வெறும் குடைமிளகாய் மட்டும் பயன்படுத்தி சூப்பரான மசாலா செஞ்சி சாப்பிடலாம் வாங்க. இதுக்கு அதிக நேரம் தேவைப்படாது, சுலபமான முறையில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
வீட்டில் இருக்கும் பொருட்களுடன் குடைமிளகாய் மட்டும் இருந்தால் போது நல்ல காரசாரமான கிரேவி செய்து சூடான சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். வாங்க படி படியாக அதை எப்படி செய்வது என்று பாப்போம்.
தக்காளி - 3 (நறுக்கியது)
முந்திரி - 6
பட்டை - 1/4 இன்ச்
தேவையான பொருட்கள்:
வெங்காயம்
பச்சை மிளகாய்
குடைமிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
சீரகம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது
முதலில் தக்காளி, முந்திரி, பட்டை ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும், அதற்கு பிறகு பச்சை மிளகாய் போட்டு கிண்டி விடவும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை விலகும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் அரைத்த தக்காளி, சிறிது நீரை சேர்த்து மூடி வைக்கவும். சுமார் 5 நிமிடம் வேக வைத்த பின்னர் குடைமிளகாயை போட்டு இறக்கி விடவும்.
இறுதியாக வாசனைக்கு கொத்தமல்லியை தூவி பரிமாறலாம். நல்ல சுவையான காரமான ஸ்பைசி குடைமிளகாய் மசாலா தயார். இதனை சப்பாத்தி, naan, தோசை, இட்லி, சாப்பாடு இப்படி எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…