இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்.எஸ் டோனி அவர்களின் கடைசி ஐபிஎல் போட்டி குறித்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தது சி.எஸ்.கே நிறுவனம்.
வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இது தோனியின் இறுதி போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தன் மீது சென்னை ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் என்னுடைய இறுதி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி விட்டு தான் ஓய்வு பெரும் முடிவை அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
அப்படி என்றால் மே 14 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளது. அதற்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணிக்கு எந்த போட்டியும் நடைபெறவில்லை. எனவே, அது தான் கடைசி போட்டியாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் அவருக்கு ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி அவருக்கு விடை கொடுக்க முடிவு செய்ததாக சிஎஸ்கே அதிகாரி கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…