ஸ்மார்ட் காலத்தில் வாழும் நாம், புதிய ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளைத் தேடி அலைகிறோம். இந்த சூழலில், ஸ்மார்ட்வாட்ச் தலைமுறையாக மாறி இருக்கிறோம். பழைய வாட்சுகளை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில், சந்தையில் கிடைக்கும் சிறந்த வாட்ச் தான் அமேஸ்ஃபிட் நிறுவனம் ஸ்மார்ட்வாட்சுகள்.
தற்போது புதிய ஸ்மார்ட்வாட்சை குறைந்த விலையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமேஸ்ஃபிட் பாப் 3எஸ் எனும் புதிய ஸ்மார்ட்வாட்ச், 1.96” இன்ச் எச்டி அமோலெட் டிஸ்ப்ளே, 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், மெட்டாலிக் டிசைன் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இத்துடன் இதய துடிப்பு, மன அழுத்த அளவுகள், நாடியில் ஆக்சிஜன் அளவுகளை கண்டறியும் திறனும் இந்த வாட்ச் கொண்டுள்ளது. ஆனால், ஒரு பெரிய குறையாக இந்த வாட்சில் ஜிபிஎஸ் கொடுக்கப்படவில்லை. பட்ஜெட் விலையில் வருவதால், இந்த அம்சத்தினை நிறுவனம் தவிர்த்துள்ளது.
AmazFit Pop 3S மாடலில் நூறுக்கும் அதிகமாக ஸ்போட்ஸ் மோடுகளை நிறுவனம் கொடுத்துள்ளது. தண்ணீரில் துள்ளிகுதித்து விளையாட ஐபி68 தர டஸ்ட் மற்றும் நீர் புகாத பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், 12 நாள்கள் தாக்குப்பிடிக்கும் பேட்டரி சேமிப்பு திறனும் இதில் உள்ளது.
புதிய அமேஸ்ஃபிட் பாப் 3எஸ் மாடலின் விலை ரூ.3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு, சில்வர் ஆகிய இரண்டு நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது.
இத்துடன் நேர்த்தியான சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இதன் மெட்டாலிக் சில்வர் ஸ்டிராப் அடங்கிய மாடலின் விலை ரூ.3,999 ஆக விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்சை அமேசான் இணைய விற்பனை தளம், அமேஸ்ஃபிட் இந்தியா வலைதளங்களில் இருந்து பயனர்கள் வாங்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…