நமக்கு பெரும்பாலும் தெரிந்த பழங்களுள் ஒன்று தான் இந்த அத்திப்பழம். அதிக சுவையும், ஏராளமான ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள இந்த அத்திப்பழத்தினை தொடர்ந்தது நாம் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகள் குணமடையும். இந்த அத்திப்பழம் பார்ப்பதற்கு கூம்பு வடிவில் இருக்கும். அதிலும், உலர்ந்த அத்திபழத்தை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் நாம் நிறைய நன்மைகளை பெறலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த அத்திப்பழம் அத்திப்பழத்தின் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்று நாம் பார்த்தால் சர்க்கரை சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் முதலியவை. மற்ற பழங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதனை விட நாங்கு மடங்கு அதிக ஊட்டச்சத்துக்கள் இந்த அத்திப்பழத்தில் இருக்கிறது. இதுதவிர, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும் உள்ளன. அத்திப்பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்: நாம் அன்றாடும் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்து கொள்ளும் போது நம் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். இதனால், சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் ஏறத்தாழ்வு ஏற்பட்டு உடலில் இரத்த அழுத்தம் ஏற்படும். இந்த இரத்த அழுத்தத்தை குணப்படுத்த அன்றாடும் அத்திபழத்தை சாப்பிடுவது சிறந்த மருந்தாகும். எனவே தினமும் 1 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இரத்த அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவருந்திய பிறகு சிறிது அத்திப்பழத்தின் விதையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும். அதேபோல், தினமும் இரவு தூங்குவதற்கு முன் 5 அத்திப்பழம் சாப்பிட்டு வருவதனால் மலச்சிக்கல் என்ற பிரச்சனையே வராது; இருந்தாலும் விரைவில் காணாமல் போய்விடும். அத்திப்பழத்தினை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அளவற்ற ஆரோக்கியத்தை பெறலாம். அதேபோல், தினமும் காலை மாலை என இருவேளையும் 5 முதல் 10 அத்திப்பழத்தினை சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் பால் குடித்து வந்தால் உடலில் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும். நமது உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்பு சத்து அவசியம் தேவை. இந்த ஹீமோகுளோபின் அளவில் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் இரத்த சோகை ஏற்படுகிறது. எனவே, இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் உலர்ந்த அத்திப்பழத்தினை ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு நமது உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் இரத்த சோகை விரைவில் குணமடையும். வெண்குஷ்டம் நோயை குணப்படுத்த சீமை அத்திப்பழம் பயன்படுகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வென்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் முதலிய ஆரோக்கிய பிரச்சனைகள் குணமடையும். அதுமட்டுமின்றி, இந்த அத்திப்பழத்தினை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசி வர வெண்குஷ்டம் மறையும். தற்போதை காலக்கட்டத்தில் வாய்ப்புண் என்பது அனைவருக்கும் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாகும். அப்படி வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவினால் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.
நமது ஆரோக்கியத்தை அளவிடும் சில முக்கிய விஷயங்களில் ரத்த அழுத்தம் முக்கியமானது. இளம் வயதிலேயே உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
Nandhinipriya Ganeshan July 07, 2023
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையான ஒன்று. இந்த நேரத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் நாட்களின் முதல் மூன்று நாட்களும் வழக்கமாக செய்யும் பணிகளை செய்ய அசௌகரியம் ஏற்படும். அதனால் தான் முன்பெல்லாம் மாதவிடாய் நாட்களில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று வீட்டின் ஒரு அறையில் உட்கார வைத்திருப்பார்கள். ஏனென்றால், அந்த நாட்களில் பெண்களுக்கு அதிகப்படியான ஓய்வு தேவைப்படுகிறது. அந்த காலத்தில் மாதவிடாய் நாட்களில் (தீட்டு) பெண்களை ஒதுக்கி வைத்ததற்கான காரணமும் இதுதான். ஆனால், இந்த காலத்தில் பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதனால், அந்த மாதிரியான சமயத்தில் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.. என்னெல்லாம் செய்ய கூடாது.. என்று பல்வேறு நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். அதில் ஒன்று தான் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தலைக்கு குளிக்க கூடாது என்ற நடைமுறை. உண்மையில், அந்த காலத்திலேயே இருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. அதாவது, அப்போதெல்லாம் பெண்கள் குளிக்க கிணறு, ஏரி, குளங்களில் தான் குளிப்பார்கள். மற்ற நாட்களை காட்டிலும் மாதவிடாய் காலத்தில் குளிக்கும்போது தண்ணீரால் பல தொற்றுகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தான் மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொன்னார்கள். தற்போது, அனைவருக்கும் வீட்டுக்கு வீடு ஒன்றுக்கு இரண்டு குளியலறைகளை வைத்துள்ளோம்.. இப்பவும் குளிக்கக் கூடாதா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது என்று சொல்வதற்கு பின்னால் ஆயிரம் காரணம் இருக்கும்.. அதே காரணம் இதற்கு பின்னாலும் இருக்கிறது. அதாவது, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது உதிரப்போக்கு சீராக வெளியேற வேண்டுமென்றால் உடல் சூடாக இருக்க வேண்டியது அவசியம். அந்த சமயத்தில் நாம் தலைக்கு குளிக்கும்போது உடல்சூடு தணிந்து குளிர்ச்சியாகிவிடும். இதனால், உதிரப்போக்கு சீராக வெளியேறாமல் உறைந்துவிடுவதுடன், வயிற்று வலி மற்றும் கட்டி ஏற்படுகின்றது. இவை சில தருணங்களில் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது. அதோடு உடல் சூட்டில் இருக்கும்போது தலைக்கு குளிக்கும்போது சிலருக்கு சளி, தும்மல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தலைக்கு குளிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்று நாளில் இரத்தப்போக்கு குறைவாக இருக்கும் என்பதால் அதன் பின்பு தலைக்கு குளித்து கொள்ளலாம்.
பூவையும் பெண்ணையும் எப்படி பிரிக்கமுடியாதோ, அப்படித்தான் பூங்கார் அரிசியையும் பெண்களையும் தனித்து பார்க்கமுடியாது. அந்தளவிற்கு பெண்களுக்காகவே இயற்கை தந்த அற்புத கொடைதான் பூங்கார் அரிசி. 1952ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல பாரம்பரிய நெல்கள் அழிந்தன. அந்த வெள்ளப்பெருக்கில காப்பாற்றப்பட்ட ஒருசில பாரம்பரிய நெல்களில் பூங்கார் அரிசியும் ஒன்று. அப்படி காப்பாற்றப்பட்ட அரிய நெல்ரகமான பூங்கார்தான் பெண்களின் கர்ப்பபை காக்கும் வரம்.
Nandhinipriya Ganeshan July 04, 2023
நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது இன்றைய காலத்தில் சகஜமான ஒரு நோயாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இந்த நோய் ஒரு சிலருக்கு மட்டும் தான் இருந்தது, ஆனால் இப்போது இந்நோய் இல்லாதவர்கள் தான் ஒரு சிலர் இருக்கிறார்கள். வயசானாலே சர்க்கரை நோய் வந்துவிடும் என்பது எழுதப்படாத நியதி. அப்படி வயசானாலும் சர்க்கரை நோய் மற்றும் இரத்தம் அழுத்தம் இல்லை என்றால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் என்றால் என்ன? நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட அதிகமாவது அதாவது 180 மிகி சதவீதத்தை தாண்டும் நிலையே சர்க்கரை நோய். பல்வேறு காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. சர்க்கரையின் அளவை பொறுத்து டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக டைப் 1 அரிதாகவே ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. டைப் 2 தான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது. பொதுவாக, சர்க்கரை நோயானது மரபியல் நோய் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, பரம்பரையில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பரம்பரையில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, மாறுபட்ட உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது இந்த பதிவில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். நீரிழிவு நோய் அறிகுறிகள்: ➥ உடலில் ஏதாவது காயங்கள் அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு வழக்கத்தைவிட மெதுவாக குணமடைந்தாலோ அல்லது குணமடையாமல் இருந்தாலோ சர்க்கரை நோயின் அறிகுறியாகும். ➥ பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் சிறுநீர்ப்பை தொற்று அல்லது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம். ➥ பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், மயக்கம் ஏற்பட்டால், அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டால் அது குறைந்த ரத்த சர்க்கரை அளவின் காரணமாக இருக்கலாம். ➥ உங்களுக்கு திடீரென உணவுகளில் அதிகமான சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது போன்ற உணர்வு இருந்தால் அதுவும் நீரிழவு நோயின் அறிகுறியே. ➥ சருமத்தில் ஏதாவது அழற்சி இருந்தால் தான் சருமத்தில் அரிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், சருமம் நீரிழப்பால் நாளடைவில் வறண்டு அடிக்கடி அரிப்பை ஏற்படுத்தும். அதுவும் நீரிழிவு நோயாக இருக்கலாம். ➥ பல் ஈறுகளில் வலி, வீக்கம் அல்லது சிவந்து இருத்தல் போன்றவையும் நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ➥ நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறி வறண்ட, வெடித்துப்போன உதடுகள் அல்லது சொரசொரப்பான நாக்கு போன்றவை. வாய் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாதபோது இந்த உணர்வு ஏற்படுகிறது. ➥ ஒருவர் வழக்கத்தைவிடவும் அதிக சோர்வாக உணர்ந்தால் அதுவும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் உள்ள உயர் இரத்த சர்க்கரையானது குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உடலை அனுமதிக்காததால், உடல் ஆற்றல் இல்லாமல் சோர்வை ஏற்படுத்துகிறது. ➥ அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு இரத்த சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறியாகும். அதாவது, நீரிழிவு இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸை உருவாக்குகிறது. இதை வடிக்க சிறுநீரகங்கள் அதிக வேலை செய்வதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது. மேலும், அந்த குளுக்கோஸ் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.
Nandhinipriya Ganeshan July 04, 2023
அனைவருக்கும் ஃபேவரட் உணவு என்றால் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது முட்டை தான். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளில் முட்டையும் ஒன்று. இந்த ஒரு பொருளை வைத்து பல ரெசிப்பிகளை குறைந்த நேரத்தில் செய்துவிட முடியும். பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிறைந்த இந்த முட்டையை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் சத்துக்கள் உடலுக்கு அப்படியே கிடைக்கும். எல்லா உணவு பொருட்களுக்கும் ஒரு வரைமுறை உண்டு. ஏனெனில், பல சமயங்களில் சில உணவுகளை முட்டையோடு சேர்த்து சாப்பிடுபவர்களின் உடல்நிலை மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஒவ்வொருக்கும் ஒருவிதமான டேஸ்ட் இருக்கும். ஆனால், அது எல்லா உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும் விதமாக இருக்காது. அந்தவகையில், முட்டையோடு எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பார்க்கலாம். முட்டையோடு சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்: ➥ சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை முட்டையோடு சேர்த்து சாப்பிடக்கூடாது. இதில் இரண்டிலும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், அடிக்கடி சேர்த்து சாப்பிடும்போது இரத்த உறைதலுடன் மாரடைப்புக்கான வாய்ப்புகளையும் அதிகரித்துவிடும். ➥ பொதுவாக முட்டை உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய ஒரு உணவு. ஆனால், அதை மாட்டிறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்களை விரைவில் சோம்பேறியாக மாற்றிவிடும். ➥ திராட்சை, தர்பூசணி, ஆப்பிள் போன்ற பழங்களுடன் முட்டையை சாப்பிட கூடாது. ஏனென்றால் பழங்களின் செரிமான வேகமும் முட்டையின் செரிமான வேகமும் மாறுபடுவதால் நம் உடலில் அஜீரண பிரச்சினையை அதிகளவில் ஏற்படுத்தும். ➥ மீன் மற்றும் முட்டை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் ஒன்றுக்கொன்று சலித்ததில்லை. இருப்பினும், இரண்டு உணவுகளையும் சேர்த்து உட்கொள்வதால் தோலில் வெள்ளை நிற புள்ளிகள் அல்லது பருக்கள் ஏற்படலாம். ➥ உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்களை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் உருளைக்கிழங்குடன் முட்டையை சாப்பிடுவதால், உருளைக் கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்தை நம்முடைய உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல், அஜீரண கோளாறையும் ஏற்படுத்தும். ➥ பெரும்பாலானோர் காலை உணவாக முட்டை மற்றும் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடுகிறார். ஆனால், வாழைப்பழங்களை முட்டையுடன் சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். ➥ பார்ப்பதற்கு தக்காளியை போன்று தோற்றமளிக்கும் இந்த பெர்சிம்மன் பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், இதை முட்டையை சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால், இரைப்பையை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்து, உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்துவிடும். ➥ டீ அல்லது காபி மற்றும் முட்டையை ஒன்றாக சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வருவந்தால், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ➥ எலுமிச்சையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும் போது அதில் இருக்கும் சிட்ரிக் ஆசிட், மாரடைப்பு அபாயத்தை அதிகரித்துவிடும். ➥ சோயா மில்க்கில் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்ஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.
பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மையமாக இருக்கக்கூடியது மாதுளை. மாதுளையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் மாதுளை பழத்தைப் போலவே மாதுளையின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Nandhinipriya Ganeshan June 29, 2023
என்னதான் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கோடைக்காலத்தில் பூச்சிகள் வீட்டை சுற்றி வலம் வரும். வண்டுகள், எறும்புகள், சிறு பூச்சிகள் தவிர பூரான், தேள் போன்ற விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வரும். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். சில சமயங்களில் பெரியவர்களையும் கூட. கடித்தது எந்த வகை பூச்சி என்பதை தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே எளிதில் கண்டுபிடித்து விடலாம். இருப்பினும், தேள் கடிக்கும் போது தேனி கொட்டியது போன்று தான் இருக்கும். ஆனால், அதைவிட கடுமையான வலியை தரக்கூடியது. இந்த உலகில் 1500 வகையான தேள்கள் இருக்கின்றன. அவற்றில் 30 வகையான தேள்கள் மட்டுமே உயிருக்கு ஆபத்தை தரக்கூடியது. எனவே, எவ்வகை தேளாக இருந்தாலும் கொட்டியதும் உடனடியாக சிகிச்சை கொடுக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் மருத்துவமனை செல்ல நேரமாகிவிட்டால், முதலில் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். தேள் கடிக்கு வீட்டு வைத்தியம்: ➥ எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும். ➥ தும்பை இலைகளை எடுத்து அரைத்து நன்றாக மசித்து அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தடவி வந்தால் உடனடியாக வலி குறையும். ➥ தும்பை இலையை மிளகுடன் சேர்த்து அரைத்து உள்ளுக்கு கொடுத்து வெளியிலும் பூசி வந்தாலும் விஷம் நீங்கும். ➥ நாட்டு வெல்லத்துடன், கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலை சேர்த்து நன்றாக கலந்து பிசைத்து தேள் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் குறையும். ➥ தேள் கடித்ததும் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் உடனடி கை வைத்தியத்துக்கு மட்டுமே. எனவே, சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
Nandhinipriya Ganeshan June 29, 2023
மஞ்சள் காமாலை என்றால் என்ன? நமது உடலில் பிலிரூபின் என்ற பித்த நீரானது அதிகமாகும் இந்த மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. அதாவது, மண்ணீரலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படும்போது இந்த பிலிரூபின் என்ற பித்த நீரானது சுரக்கப்படும். பொதுவாகவே, இது மலம், சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ இந்த பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடும். இதனால், சருமமும் கண்களும் மஞ்சள் நிறமாக மாறாக தொடங்கும். இதைத் தான் 'மஞ்சள் காமாலை' என்கின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவரையும் பாதிக்கும் இந்த மஞ்சள் காமாலையை தடுக்கக்கூடிய தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லை. இந்த மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்துவது எளிது. இல்லையெனில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடியது. மஞ்சள் காமாலை உங்களுக்கு இருப்பதை சில அறிகுறிகளை வைத்து எளிதாக கண்டுபிடித்த முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். தோலின் நிறம் மாறுவது: மஞ்சள் காமாலை இருப்பதை உறுதிப்படுத்தும் முதல் அறிகுறியே இது தான். மஞ்சள் காமாலையின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்று. அதாவது, நீங்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுடைய தோல் மற்றும் கண் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக இருப்பதால் இந்த மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. வாந்தி உணர்வு: மஞ்சள் காமாலை மற்றொரு பொதுவான அறிகுறி அடிக்கடி வாந்தி ஏற்படுவது. பொதுவாக, வயிறு சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சனைகளால் கூட வாந்தி ஏற்படும். ஆனால், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வாந்தி பிரச்சனை இருந்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வது நல்லது. திடீர் எடை குறைவு: இயல்பைவிட அசாதாரணமான அளவில் ஏற்படும் எடை இழப்பும் மஞ்சள் காமாலையின் அறிகுறியே. மஞ்சள் காமாலை ஏற்பட்டால் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துக்களை குடலால் உறிஞ்ச முடியாது. இதனால் பசியின்மை மற்றும் வாந்தி ஏற்படும். இதன் காரணமாக சாப்பிடும் உணவின் அளவும் குறைந்து விடும். இதுவே திடீர் மற்றும் மோசமான உடல் எடை குறைவுக்கு காரணம். அதிகப்படியான காய்ச்சல்: பொதுவாக, காய்ச்சல் அனைவருக்குமே ஏற்படும். இருப்பினும், மஞ்சள் காமாலை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் காய்ச்சல் இருக்கிறது. அதாவது, அந்த காய்ச்சலானது உடம்பின் வெப்பநிலை 100 ஐ காட்டிலும் அதிகமாக இருப்பதோடு, அடிவயிற்றில் வலி, வீக்கம் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை இருந்தால் அது மஞ்சள் காமாலை தான். சிறுநீர், மலம் நிறம் கருப்பு: ஒருவேளை உங்களுக்கு மஞ்சள் காமாலை இருந்தால், உங்கள் சிறுநீர் கருமை நிறமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் சிறுநீர்க்குழாய் வழியாக அதிகப்படியான பிலிரூபின் வெளியேற்றப்படுவதே. அதேபோல், சிலருக்கு மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இதற்கு காரணம் உடலில் மஞ்சள் காமாலையின் தீவிர தன்மையே. உடலில் மஞ்சள் காமாலை தீவிரமானால் கல்லீரல் வேலை செய்வதை நிறுத்திவிடும். இதனால் மலமானது கருமை நிறத்தில் வெளியேறும்.
Nandhinipriya Ganeshan June 29, 2023
ராவ் ஃபுட் டயட் என்பது சமைக்கப்படாத உணவை மட்டுமே உண்ணும் ஒரு வித டயட் முறையாகும். வெஜ் பிரியர்களுக்கு சிறந்த டயட் வகையும் கூட. இப்படி சாப்பிடாலும் எடையை குறைக்கலாம். சில நேரங்களில் இதில் மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் பச்சையாக சாப்பிட வேண்டிருக்கும். ஆனால், இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் மூல உணவுகளை அதாவது சமைக்கப்படாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். என்ன சாப்பிடலாம்? பச்சை கொட்டைகள் மற்றும் விதைகள் அனைத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் பாதாம் பட்டர் மற்றும் பீநட் பட்டர் முளைத்த, பச்சையாகவோ அல்லது ஊறவைத்த தானியங்கள், பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள் தேங்காய்ப்பால் பாதாம் பால் கடற்பாசிகள் பச்சை பால் மற்றும் முட்டை (விரும்பினால்) இறைச்சி மற்றும் மீன் (விரும்பினால்) மற்ற இயற்கை மற்றும் ஆர்கானிக் உணவுகள் எதை தவிர்க்க வேண்டும்? உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சர்க்கரை மற்றும் மாவு சமைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் இறைச்சிகள் டீ மற்றும் காபி ஆல்கஹால் பாஸ்தா சுடப்பட்ட உணவுப் பொருட்கள் வறுத்த கொட்டைகள் மற்றும் விதைகள், அவற்றின் வெண்ணெய் உட்பட டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் பால் பொருட்கள் மற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கிறது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் இருதய நோய்களைத் தூண்டுகிறது. எனவே, இந்த உணவுகளை அகற்றுவது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எடையை குறைக்க உதவுகிறது சமைக்காத உணவுகளை உண்பதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். பொதுவாக இந்த உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், தாவர அடிப்படையிலான உணவுகள் நார்ச்சத்து நிறைந்தவை, அத்துடன் உப்பு, சமையல் எண்ணெய்கள் அல்லது சர்க்கரை இல்லாதது. இதனால், எளிதில் உடல் எடையை குறைத்துவிட முடியும். ஊட்டச்சத்து நிறைந்தது ஒரு பொருளை சமைப்பதன் மூலம் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஸ் மற்றும் வைட்டமின் பி போன்ற சில ஊட்டச்சத்துகள் நீக்கப்படுகின்றன. ஆனால், ராவ் ஃபுட் டயட் என்பது முழுக்க முழுக்க சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள் நிறைந்தது. இதனால், அவற்றில் இருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களும் உடலுக்கு அப்படியே கொடுக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த டயட் என்றால் ராவ் ஃபுட் டயட் தான். மேலும், பச்சையாக உணவுகளை உண்பது உங்கள் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மூல (சமைக்கப்படாத உணவு) உணவில் உள்ள ஆபத்துகள்: என்னதான் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பச்சையாக சாப்பிட்டாலும், அவற்றில் சில மூல உணவுகளை உண்பது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், அந்த உணவுகளில் ஈ.கோலி போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. சமைப்பதால் உணவுகளில் உள்ள பாக்டீரியாக்கள், நச்சுகள் மற்றும் பிற கிருமிகள் அழிக்கப்பட்டு, உணவு விஷம் ஏற்படுவதைத் தடுக்கிறது. எப்பொழுதும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களை உண்ணும் முன் நன்றாகக் கழுவ வேண்டும். அப்படி நீங்க எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டிய சில உணவுகள் என்னென்னவென்று தெரிந்துக் கொள்வது அவசியம். கிட்னி பீன்ஸ் பருப்பு அவரை முளை விதைகள் முட்டை கடல் உணவுகள் ஜெல்லி மீன் பால் பொருட்கள் குறிப்பு: கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த டயட்டை பின்பற்ற வேண்டாம்.