Nandhinipriya Ganeshan July 19, 2023
கருவுற்ற முதல் இரண்டு மாதங்கள் வரை உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று. காரணம் மூன்று மாதம் வரையிலும் கரு பலவீனமானதாக தான் இருக்கும். அப்போது சில உணவுகளை அந்த பெண் எடுத்துக்கொள்ளும் அது கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். அந்தவகையில், முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறையாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் கடைபிடிக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்: ➥ கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சீஸ் உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம், இந்த சீஸ் பதப்படுத்தப்படாத பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால், ஃபுட் பாய்ஷன் ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். அதை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, ஆரம்பகால கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பது நல்லது. ➥ மைக்ரோவேவ்-ரெடி உணவுகள், கேக்குகள், பிஸ்கட்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள் போன்ற ஜீரோ கலோரி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மேலும், சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தீங்கு விளைக்கக்கூடிய பாக்டீரியாக்களும் இருக்கலாம். ➥ கடல் உணவுகளில் அதிகளவு பாதரசம் இருக்கும். இது கருவின் மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடும். எனவே, வால்மீன், டுனா ஆகியவற்றை ஆரம்ப காலத்தில் மட்டுமல்லாமல், கர்ப்ப காலம் முழுவதுமே தவிர்ப்பது நல்லது. ➥ பொதுவாக, பழங்கள் ஆரோக்கியமானது தான். இருப்பினும், சில பழங்களை கர்ப்பத்தின் முதல் மாதத்தில் சாப்பிடக்கூடாது. அவற்றில் ஒன்று தான் பப்பாளி. பழுக்காத மற்றும் அரை பழுத்த பப்பாளி பழங்களில் லேடெக்ஸ் இருக்கிறது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால், குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். எனவே கர்ப்ப காலத்தில் இவற்றை தவிர்க்கவும். இருப்பினும், பழுத்த பப்பாளியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ➥ அதேபோல், அன்னாசிப்பழத்தையும் இந்த மாதிரியான நேரத்தில் சாப்பிடக்கூடாது. காரணம் அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் உள்ளது, இது கருப்பை வாயை மென்மையாக்கி, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது . ➥ சில பெண்களுக்கு ஆஃப் பாயில் சாப்பிடுவது, பச்சை முட்டையை குடிப்பது மிகவும் பிடிக்கும். இருப்பினும், கர்ப்பக் காலத்தில் அப்படி உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பச்சை முட்டையில் இருக்கும் ஒருவிதமான நுண்ணுயிரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடியது. ➥ அதிகளவு காஃபின் உட்கொள்வதையும், ஆல்கஹால் எடுத்துக் கொள்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல், அதிகப்படியான இனிப்புகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது எடை அதிகரிப்பு மற்றும் கர்ப்பக்கால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
Nandhinipriya Ganeshan June 08, 2023
நீங்க குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் சரியான தருணத்தில் பாலுறவில் ஈடுபட வேண்டும். குறைந்தது வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறையாவது பாலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம். இதைவிட முக்கியமானது குறிப்பிட்ட சில செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியதும் அவசியம். ஏனென்றால், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கலாம். எனவே, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் அதாவது ஆரம்பகால கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் செய்யக் கூடாதவை: பொதுவாக நிறைய பெண்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதை விரும்புவார்கள். ஆனால், கருவுறுதலை திட்டமிட்ட பிறகு இறுக்கமான குறிப்பாக உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். மேலும், லெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான மேல் ஆடைகளையும் அணிய வேண்டாம். ஏனென்றால், கரு உருவாகும் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், இயற்கையாக சுவாசிக்க உடலுக்கு இடம் கொடுக்க வேண்டியதும் அவசியம். எனவே, முடிந்தவரை இறுக்கமான ஆடைகளை கொஞ்சம் நாள் ஒதுக்கி வைத்துவிட்டு, தளர்வான ஆடைகளை அணியுங்கள். அதேபோல், ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட்டு, தட்டையான மற்றும் வசதியான காலணிகளை அணியுங்கள். முதல் மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வது காலை சுகவீனத்தை ஏற்படுத்துவதோடு, உங்கள் கர்ப்பத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, முடிந்த வரை நீண்ட தூரம் நடப்பது, வேகமாக நடப்பது, வாகனத்தில் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். முதல் மூன்று மாதம் வரை 20 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள எந்தப் பொருளையும் தூக்க வேண்டாம். அதேப்போல், எந்த வீட்டு வேலைகளைச் செய்யும்போதும் குனிய வேண்டாம், அது உங்களுக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும். மண் சம்பந்தமான பணிகளில் ஈடும்படும் போது தவறாமல் கையுறைகளை பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். அதேபோல், நம்மில் பலரும் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இருப்பினும், அவற்றின் முடி, மலம் ஆகியவற்றில் ஒட்டுண்ணிகள் இருக்கும். எனவே, கர்ப்பக் காலத்தில் செல்ல பிராணிகளை பராமரிப்பதை கொஞ்சம் தவிர்க்கவும். கர்ப்பம் உறுதியானதும் முதல் மூன்று மாதங்கள் வரை பாலுறவில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அந்த சமயத்தில் உடலில் ஏற்படும் அழுத்தம் கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
Nandhinipriya Ganeshan June 07, 2023
ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும். அந்தவகையில், கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். முதல் மாதம் என்பது உங்களுடைய கடைசி மாதவிடாய் தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, இந்த அறிகுறிகள் தான் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும். முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள்: ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்பதை முதலில் உணர்த்தும் அறிகுறி என்றால் அது மாதவிடாய் தள்ளிப்போவது தான். இது தான் முதல் அறிகுறி. அதாவது, கருத்தரித்த பிறகு உடல் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும். இதனால், மாதவிடாய் நின்றுவிடும். கருவுற்ற முட்டை கருப்பையில் பதியும்போது, உள்வைப்பு காரணமாக லேசான இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பை கவனிக்கலாம். கருத்தரித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த லேசான இரத்தப்போக்கு வலியற்றதாகவும் இருக்கும். இருப்பினும், பிறப்புறுப்புகளைத் துடைக்கும்போது மட்டும் வலி இருக்கும். இதுவும் இயல்பான ஒன்றே. அடுத்த அறிகுறி உங்க மார்பகங்களில் தென்படும். அதாவது, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் உங்கள் மார்பகங்களில் சிறிய புடைப்புகள் மற்றும் வலி இருக்கலாம். மேலும் முலைக்காம்பு கருமையாக இருக்கும். அதேபோல், மார்பக நரம்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு இருக்கும். கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் மனநிலையில் பல மாற்றங்களை அனுபவிக்கலாம். உதாரணமாக, சிறிய சண்டையாக இருந்தாலும் அழ ஆரம்பிக்கலாம் அல்லது கவலைப்படலாம். காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கோபப்படலாம். இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாறுவதுதான். உடலில் பீட்டா எச்.சி.ஜி அளவுகள் அதிகரிப்பதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இது கர்ப்பத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பே ஏற்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவை பகல் அல்லது இரவு என எந்த நேரத்திலும் நிகழலாம். இருப்பினும், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. அதீத சோர்வாக உணர்வீர்கள், படுத்தாலும் தூக்கம் வராது. இதற்கு காரணம் கருப்பையில் கருவின் வளர்ச்சிக்காக உங்க உடல் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள தொடங்கும். இதனால் ஆற்றல் அனைத்தும் அதற்கே செலவாகும். அந்த சமயத்தில் உடல் ஒரு நிலையில் இருக்காது. உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் கருப்பைக்கு இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், சிறுநீரகங்கள் உடல் திரவங்களைக் கையாள அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதன் விளைவு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டும். கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் அமைப்பில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், கரு வளரத் தொடங்குவதால் உங்க வயிறு மற்றும் குடலை மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால், மூன்றாவது மூன்று மாதங்களில் இந்த அறிகுறிகளை மீண்டும் அனுபவிப்பீர்கள். புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தசைகளை தளர்த்துவதால், உணவு மெதுவாக குடல் வழியாக செல்கிறது. இதனால் செரிமானம் மெதுவாக நடைபெறும், இதன் விளைவு மலச்சிக்கல். ஒரு சில பெண்களுக்கு ஆரம்பகால கர்ப்ப காலத்தில் அடிக்கடி தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
Nandhinipriya Ganeshan March 27, 2023
ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் தாய்மை உணரும் தருணங்களெல்லாம் வசந்தகாலம் தான். அப்படிப்பட்ட உணர்வினை கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் சில அறிகுறிகளை வைத்தே அறிந்துக் கொள்ள முடியும். அதாவது, மாதவிடாய் வருவதற்கு முன்பே கருவுறுதல் என்பது நிகழ்கிறது. இதனால் கருவுற்ற முதல் வாரத்திலேயே அறிகுறிகள் தோன்றும் என்றாலும் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை கவனிக்க தவறிவிடுகிறார்கள். இதற்கு காரணம் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டால் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியாததே. சரி, வாங்க நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan February 22, 2023
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு வரவேற்கிறோம். பொதுவாக, கர்ப்பத்தின் ஐந்தாவது மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நல்ல மாதமாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல், மனதில் ஒரு நிம்மதியும் குடிக்கொள்ளும். இந்த மாதத்தில் தான் தாய் தனது குழந்தையின் அசைவுகளை உணர்வுத் தொடங்குகிறாள். குழந்தையின் வளர்ச்சியும் இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்கும். சரி வாங்க, ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 27, 2023
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது.
Nandhinipriya Ganeshan December 26, 2022
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும்.
Nandhinipriya Ganeshan December 19, 2022
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. சரி, உங்க இளவரசனோ இளவரசியோ 5வது மாதத்தில் எவ்வளவு எடை இருப்பார்கள், அவர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
Nandhinipriya Ganeshan December 05, 2022
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கும். இதனால், பல வகை உணவுகளை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், கர்ப்பத்தின் போது எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு சில உணவுகளை தவிர்ப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், கர்ப்பத்தின் 5வது மாதத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில உணவுப்பொருட்களை பற்றி தெரிந்துக்கொள்வோம். இவ்வகை உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் நன்மை பயக்கும்.
Nandhinipriya Ganeshan November 21, 2022
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்ப்பத்தின்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். குறிப்பாக ஐந்தாவது மாதத்தை நெறுங்கிவிட்டால், குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டாம். சரி, வாங்க ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் என்னென்ன அறிகுறிகளை அனுபவிப்பார்கள் என்று பார்க்கலாம்.