Second Trimester of Pregnancy Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்ப்பத்தின்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும்.
அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். குறிப்பாக ஐந்தாவது மாதத்தை நெறுங்கிவிட்டால், குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டாம். சரி, வாங்க ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் என்னென்ன அறிகுறிகளை அனுபவிப்பார்கள் என்று பார்க்கலாம்.
➤ முதலில் அறிகுறி நெஞ்செரிச்சல் இது கர்ப்பம் முழுவதும் நீடிக்கும். குழந்தை வளர வளர உங்களின் உட்புற உறுப்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இது உணவுக்குழாயில் உள்ள உணவுகளை மீண்டும் நகர்த்துவதற்கு கட்டாயப்படுத்தும். இதனால், உணவுக்குழாய் மற்றும் வயிற்றைப் பிரிக்கும் தசைகள் வேலை செய்யாமல், வயிற்று அமிலம் உணவுக்குழாயில் ஊடுருவி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
➤ சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. பொதுவாக, கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்திற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டும்.
➤ கர்ப்பகால ஹார்மோன்களில் ஏற்ற இறக்கம் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும், இதனால் பல கர்ப்பிணிப் பெண்களின் உடலில் பல்வேறு இடங்களில் சருமத்தை கருமையாக்குகிறது. குறிப்பாக நெற்றி, கன்னங்கள் மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாகிறது.
➤ பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்தாவது மாதத்தில் பசியின்மை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், சில உணவுகள் மீதான வெறுப்பையும் வளர்க்கலாம்.
➤ கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் சில பெண்களுக்கு அதிக நாடித் துடிப்பு மற்றும் இதயத் துடிப்பு காரணமாக படபடப்பு ஏற்படும்.
➤ புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
➤ குழந்தை வளர தொடங்குவதால் உங்கள் தோரணை மாறுகிறது, இதனால் நீங்கள் முதுகில் தான் அதிகமாக சாய்ந்து உட்கார வேண்டியிருக்கும். எனவே, முதுகுவலியும் ஏற்படும்.
➤ குழந்தை வளருவதால், வயிறு பெரிதாகி தாயின் உடல் எடையும் அதிகரிக்கும்.
➤ கர்ப்பிணியின் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் உடலில் உஷ்ணம் அதிகமாகும். நிறைய வியர்க்கவும் செய்யும். இதனால் ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவை ஏற்படலாம்.
➤ அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றும். ஒருவேளை சிறுநீர் கழிக்கும்போது உங்களுக்கு வலி ஏற்பட்டால், உங்களுக்கு தொற்று இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகுவது நல்லது.
➤ உங்கள் குழந்தைக்கு ஊட்டமளிக்க உங்கள் உடல் உற்பத்தி செய்யும் உடல் திரவங்களின் அதிகரிப்பால் நீர் தக்கவைப்பு ஏற்படுகிறது. இதனால் உங்கள் கால்கள் மற்றும் கைகள் வீங்கத் தொடங்கும்.
➤ உங்கள் உடல் ஏற்கனவே பிரசவத்திற்கு தயாராகி வருகிறது. கர்ப்பகால ஹார்மோன் ரிலாக்சின் உங்கள் மூட்டுகளை தளர்த்துகிறது, எனவே அடிவயிறு அல்லது இடுப்பின் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களிலும் வலி, தசைப்பிடிப்பு அல்லது கூர்மையான உணர்வுகளை உணரலாம்.
➤ ஐந்தாவது மாதத்திற்கு மேல், வயிற்றில் உள்ள குழந்தை நன்கு வளர ஆரம்பித்துவிடுவதால், அப்பொழுது முதல் இரண்டு உயிர்களுக்காக சாப்பிட வேண்டியதாக இருக்கும்.
➤ உங்கள் குழந்தை வளரும்போது உங்கள் வயிறு விரிவடைகிறது, மேலும் உங்கள் தோல் அதற்கேற்ப நீட்டியடையும், இது அதிக உணர்திறன் மற்றும் அரிப்புகளை உண்டாக்குகிறது. மாய்ஸ்சரைசர்கள் அரிப்புகளைப் போக்க உதவுகின்றன. உங்கள் மார்பகங்கள், கைகள் மற்றும் தொடைகளிலும் இதைப் பயன்படுத்துங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…