Priyanka Hochumin February 08, 2023
நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கு ஏற்ற பலனை அளிக்க சிவபெருமானால் உருவாக்கப்பட்ட சக்தி தான் சனி பகவான். நமக்கு துன்பங்களை மட்டும் தருகிறார் என்று எண்ணுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள். சூரிய அஸ்தமனம் ஆகும் சிறிது நேரத்தில் சனி முன்பு தோன்றி வக்கிர பார்வையை பதிக்க உத்தரவிட்டார். அவரும் அப்படி செய்ய கடுமையான சிக்கலில் சிவபெருமான் மாட்டிக்கொள்கிறார். பிறகு பார்வையை எடுத்த உடன் இவரின் பொறுமைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டார்.
Priyanka Hochumin February 03, 2023
நம்முடைய கர்மங்களுக்கான பயனை தரும் சனி பகவானால் கூட ராகுவின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை என்று நம்முள் எத்தனை பேத்துக்கு தெரியும். பூமியை உருவாக்க விவாதம் வைத்து முடிவெடுக்கப்படும் என்று சிவ பெருமான் கூறிய பட்சத்தில் தேவர் மற்றும் அசுரர்கள் தங்கள் பிரதி நிதிகளை தேர்வு செய்துக் கொண்டனர். தேவர்களுக்கு சாதகமாக சூரிய பகவானும், அசுரர்களுக்கு ஆதரவாக சனீஸ்வரரும் விவாதம் செய்தனர். இதில் நடுநிலையாக இருந்து சனி பகவான் தன்னுடைய வாதத்தில் வெற்றிப் பெற்று விட்டார்.
Priyanka Hochumin February 01, 2023
படைப்பு உருவாவதற்கு முன்னர் எந்த ஒரு பொருள், உண்மை, பொய் என்று எதுவும் இல்லை. அப்போது இருந்தது ஒரு மாபெரும் சக்தி. அந்த சக்தியானது பிரம்மம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. அதுவே முக்கண் கொண்ட மகா சக்தி சிவபெருமானாகும். பிறகு அந்த சக்தியால் உருவானது எண்ணம் மற்றும் ஒளி. அதற்கு பின்பு அந்த எண்ணம் வடிவமாக உயிர் பெற்றது அதுவே நாம் நாராயணர் என்று அழைக்கப்படும் மகா விஷ்ணு ஆவார். பிறகு படைப்புகளுக்கு ஆதியாக ஒரு இறை வடிவம் நாராயணரின் நாபியில் இருந்து உருவானவர் தான் பிரம்மா.
Priyanka Hochumin January 31, 2023
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் கர்ம பலனை அளிப்பதற்கு முன்பு சனி பகவான் என்னென்ன சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறார் தெரியுமா? அதாவது நமக்கு சோதனைகளை தரும் சனீஸ்வரர் எவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்று தெரிந்துக் கொள்ளலாம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து படைப்புகளின் சாட்சியாக மும்மூர்த்திகளிடம் கூறுகிறேன் "நான் என்னுடைய கடமையை ஆற்ற இறுதி வரை பற்றற்று இருப்பேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறுகிறார்.
Priyanka Hochumin January 30, 2023
நீதி கடவுளாக உருவான சக்தி சனீஸ்வரர் அதற்காக என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறார் என்று பாப்போம். இயற்கையின் நீதி படி, எந்த ஒரு சக்தி யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நீதி வழங்க வேண்டுமோ அவர்கள் உறவற்றவராக இருக்க வேண்டும். அப்போது தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதி தவறாமல் இருப்பார்கள். எனவே, தான் சனி பகவான் பிறந்ததில் இருந்து தாயை தவிர எந்த ஒரு உறவின் நிழலிலும் வாழவில்லை. அவர்களும் இவரின் செயலை சற்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.
Priyanka Hochumin January 25, 2023
எதனால் சனி பகவான் கர்ம பலன் அளிக்கும் கடவுளாக திகழ்கிறார் தெரியுமா? பிறப்பால் அனைவரையும் சரியான பாதையில் அழைத்துச் செல்ல மூவேந்தர்களால் படைக்கப்பட்ட சக்தி தான் சனீஸ்வரர். இவர் தன்னுடைய கடமைகளை புரிந்து கொண்ட கதைகளைப் பற்றி பாப்போம். ஏனெனில் ஒரு தேவன் என்றுமே தேவலோகத்திற்கே தன்னுடைய ஆதரவை தருவான் என்று நினைக்கிறார். ஆனால் சனீஸ்வரர் அப்படி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Priyanka Hochumin January 22, 2023
எப்படி காக்கை சனீஸ்வரருக்கு வாகனமாக அமைந்தது தெரியுமா? சூரிய உதயமாகும் தருணம் என்பதால் சனி பகவான் வேகமாக தன்னுடைய இடத்திற்கு செல்கிறார். அத்தருணத்தில் ஒரு பள்ளத்தில் குதிக்கும் போது அவர் காப்பாற்றிய காகத்தின் மீது சவாரி செய்து தப்பிப்பது விடுகிறார். அப்போது முதல் அந்த காகம் அவரை விட்டு செல்லவில்லை. இதனால் அக்காகம் சனி தேவரின் வாகனமாக மாறியது. இருப்பினும் புராணங்களின் படி, சனீஸ்வரருக்கு காகத்தை தாண்டி நிரைய விலங்குகள் வாகனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
Priyanka Hochumin January 19, 2023
நம்முடைய வாழ்வில் ஏதேனும் துன்பங்கள் துயரங்கள் நேர்ந்தால் அதற்கு காரணம் சனி பகவான் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அவர் எந்த அளவிற்கு அனைவரையும் நேசிப்பார் என்று நமக்குத் தெரியாது. கஷ்டப்படுபவர்களுடன் சேர்ந்து அதற்கான பலன் அளிப்பவருக்கும் வேதனை இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புராணங்களின் அடிப்படையில் சனி பகவான் பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 18, 2023
நவக்கிரங்களில் நீதி பகவானாக விளங்குபவர் சனி பகவான். இவர், இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். பொதுவாக, நம்முடைய ஜாதகத்தில் எந்தவகையான சனி இருக்கிறதோ, அதை பொறுத்தே நன்மையும் தீமையும் நிகழும். அந்தவகையில், எத்தனை வகையான சனிகள் இருக்கின்றன; அவை என்ன மாதியான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த தாக்கத்தை குறைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin January 15, 2023
நீதி கடவுள் என்று கூறப்படும் சனீஸ்வரர் நமக்கு துன்பம் மட்டுமே இளைப்பார் என்று பலரும் தவறாக நினைக்கின்றனர். அவர் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் அளிக்கிறார் என்று யாரும் நினைப்பதில்லை. அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து நிறைய கேள்விகள் நம்முள் இருக்கும். அதனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளவே இந்த பதிவு. இனி நாம் சனி பகவானின் பிறப்பு முதல் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்.