நம்முடைய கர்மங்களுக்கான பயனை தரும் சனி பகவானால் கூட ராகுவின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை என்று நம்முள் எத்தனை பேத்துக்கு தெரியும். பூமியை உருவாக்க விவாதம் வைத்து முடிவெடுக்கப்படும் என்று சிவ பெருமான் கூறிய பட்சத்தில் தேவர் மற்றும் அசுரர்கள் தங்கள் பிரதி நிதிகளை தேர்வு செய்துக் கொண்டனர். தேவர்களுக்கு சாதகமாக சூரிய பகவானும், அசுரர்களுக்கு ஆதரவாக சனீஸ்வரரும் விவாதம் செய்தனர். இதில் நடுநிலையாக இருந்து சனி பகவான் தன்னுடைய வாதத்தில் வெற்றிப் பெற்று விட்டார்.
ஆனால் அந்த சபைக்கு சனி வரக்கூடாது என்று தேவி சந்தியாவும், இந்திர தேவரும் திட்டம் தீட்டினர். சாயா தேவியை கடத்தி விட்டால் சனி பகவான் சபைக்கு வராமல் அவரை காப்பாற்ற சென்று விடுவார் என்று நினைத்தனர். ஆனால் அதில் தேவி சந்தியாவே மாட்டிக்கொண்டார். பின்னர் சனீஸ்வரர் அவரை காப்பாற்றி சரியான நேரத்தில் சபைக்கு வந்தார். அதற்கு பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது யார் என்பதைத் தெரிந்துக்கொண்டார்.
அதன் பின்னர் சபையை கூட்டிய அவருக்கு சாயா தேவி இருப்பது சாதகமாக இருக்காது மற்றும் தன்னுடைய மகனின் வாழ்க்கையின் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட அவர் முழுமையாக மறைந்துவிட்டார். அதற்கு பின்னர் இந்திர தேவ் தான் குற்றவாளி என்பதை தேவி சந்தியா வேற வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். அதற்கு பின்னர் அவரின் அரியணை பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு பின்பு சனி பகவானுக்கு தன்னுடைய தாயின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் தென்படுகின்றது. அதனை கண்டறிய தேவர்கள் அனைவரின் முன்னிலையிலும் கேள்வி எழுப்பின்னர் சனீஸ்வரர்.
அதில் உண்மையை தெரிந்துகொண்ட அவர் கடும் கோபம் மற்றும் வருத்தத்தில் இருந்தார். இனி தனக்கு யாரும் இல்லை என்று சூரிய லோகத்தை விட்டு சென்று விடுகிறார். அவர் செல்லும் பயணத்தில் தான் ராகுவை சந்திக்கிறார். சனியின் சமநிலையை உடைத்து ராகு பல இன்னல்களை செய்து விடுகிறார். அந்த தருணத்தில் சனி பகவான் கர்ம பலன் அளிக்கும் கடவுளாக இல்லாமல் தண்டனைகள் மட்டுமே அளிக்கும் தேவனாக மாறி விடுகிறார். அப்போது அவர் செய்த பல குற்றங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஈசன் வீரபத்திரரை அனுப்பினார்.
ஆனால் சனி பகவானோ அவரையே தாக்கிவிடுகிறார். பின்னர் தானே நேரடியாக அவதரித்து சனி பகவானை அழிக்க முடிவு செய்கிறார். ஆனால் அவரின் கோபத்தை கட்டுப்படுத்தி விஷ்ணு பகவான் தடுக்கிறார். அதற்கு பின்னர் தந்தையை தாய் மற்றும் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் குறித்து செய்த பெருமானிடம் கேள்விகளை எழுப்புகிறார். அதற்கு பின்னர் சனி பகவான் சமநிலைக்கு திரும்புகிறார். இப்போது புரிகிறதா சனி மற்றும் ராகு ஜாதக கட்டடத்தில் ஒன்றாக இருந்தால் ஏன் அப்படி நடக்கிறது என்று.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…