உடலில் எந்த பிரச்சனைகளும் வராமல் இருக்க, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு காரத்தைக் கூட தினந்தோறும் எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதிலும் குறிப்பாக கீரை வகைகளை நாம் பயன்படுத்தி வந்தால் நமக்கு எந்த நோய்களும் வராது.
நம் உணவில் கீரையைச் சேர்ந்து உண்பதால், எந்தவித பிரச்சனைகளும் நம்மை நெருங்காது. பொதுவாக அனைத்து வகைக் கீரைகளிலும் ஒரு தனிப்பண்பு உள்ளது. இதன் மூலம், நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எனவே, உடல் ஆரோக்கியத்திற்கு கீரை பெரிதும் பயனாற்றுகிறது. இந்தப் பதிவில் கீரையின் வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றிக் காண்போம்.
இந்த வகை கீரையானது, சிறுநீரகச் செயல்பாட்டை நன்றாக வைக்கும்.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இரும்புச் சத்து போன்றவை உள்ளன.
இதனைப் பொடியாக்கி தினந்தோறும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் நீரிழவு நோய் கட்டுப்பாடு ஆகும்.
மேலும், உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரும்.
மூலிகைக்குப் பயன்படுவனவற்றுள் அகத்திக் கீரையும் ஒன்று. இதில் உள்ள சத்துகள் நிறைய உடல் உபாதைகளைக் கட்டுப்படுத்துகிறது.
அதன் படி, இந்த கீரையின் இலைகள் புண்கள் குணமாகப் பயன்படுகிறது. பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் எளிதில் ஜீரணமடையும்.
இதில் உள்ள சுண்ணாம்பு சத்து பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
தொண்டையில் வலி, புண் போன்றவை இருப்பவர்கள், அகத்திக் கீரையை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம் தொண்டை பிரச்சனை குணமாகும்.
இது வயிற்றில் உள்ள புழுக்களைக் கொன்று நன்மை அளிக்கும்.
இந்த பசலைக் கீரை வகையில் நிறைய கீரை வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் ஒரு சிறப்பான பண்புகளை அளிக்கக் கூடியவையாக அமையும்.
இதன் மூலம் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும். இந்த வகைக் கீரையில் இரும்புச்சத்து, கரோட்டின், பீட்டா, ஃபோலிக் அமிலம் உள்ளிட்டவை அதிகமாகக் காணப்படுகிறது.
இதயநோய் வராமல் தடுக்கவும், குழந்தைகளுக்கு வரக்கூடிய சில நரம்பு வியாதிகள் வராமலும் தடுக்கிறது.
பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க மற்றும் உடலில் கொழுப்பைக் கரைக்கப் பயன்படுகிறது.
இது ஆண்டு முழுவதும் வளரக்கூடிய கீரை வகை ஆகும். இந்த கீரையானது குப்பைகளில் வளர்வதால் குப்பைக்கீரை என அழைக்கப்பட்டது.
இதில் உள்ள சத்துக்கள், நரம்பு மற்றும் எலும்புகளுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.
இது மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டதாய் அமைகிறது. இதனை உண்பதால், சொறி சிரங்கு மறைவதுடன், மூக்கு தொடர்பான வியாதிகள் குணமடையும்.
அரைக்கீரை பொதுவாக உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், உடல் வலுவைத் தரும். இதை தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான பயன்களைப் பெறலாம்.
குடல் புண்கள் விரைவில் குணமாக, மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபட அரைக்கீரை பெரிதும் உதவுகிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துக்கள், நரம்பு தளர்ச்சியை சரி செய்து, நரம்புகளுக்கு பலம் தருகிறது.
இது போன்ற இன்னும் சில கீரை வகைகள் உடலுக்கு நன்மைகளைத் தருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…